SELANGOR

மக்கள் நலனில் அக்கறை காட்டுவதில் சிலாங்கூரே சிறந்த மாநிலம், நிறைய உதவிகள் கிடைக்கின்றன

16 மார்ச் 2023, 2:30 AM
மக்கள் நலனில் அக்கறை காட்டுவதில் சிலாங்கூரே சிறந்த மாநிலம், நிறைய உதவிகள் கிடைக்கின்றன

ஷா ஆலம், மார்ச் 16: குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை எல்லா மக்களின் நலனிலும் அக்கறை காட்டுவதில் சிலாங்கூரே சிறந்த மாநிலமாக உள்ளதாகப் பண்டார் உத்தாமா மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின்  புகழ்ந்துரைத்தார்.

மாநிலத்தின் மக்களுக்கு பல்வேறு திட்டங்களைக்  குறிப்பாக 46 இல் திசம் சிலாங்கூர் பென்யாயாங் (ISP) தொகுப்பில்   ஒழுங்கமைப்பின் மூலம் இதைக் காணலாம்.

"இதில் இலவச தண்ணீர், இலவச தடுப்பூசிகள், சட்ட உதவி, சுகாதாரப் பரிசோதனை, இணையத் தரவு, சிலாங்கூர் ஸ்மார்ட் பஸ், ஆலோசனை மற்றும் குறிப்பிடப்படாத பலவற்றை இந்த 46 திட்டங்களில் உள்ளடக்கவில்லை.

இதைக் கொண்டு "சிலாங்கூர் என்ற மாநிலத்தில் பிறந்த ஒருவர் எவ்வளவு அதிர்ஷ்டசாலி என்பதை ஒருவர் அறிந்து கொள்ளலாம்.

மாநிலத்தின் பல்வேறு துறைகள்  முன்னெடுத்துள்ள அம்சங்களின்  தொழில்முனைவு, விவசாயம், டிஜிட்டல் மயமாக்கல், காலநிலை மாற்றம் போன்ற பிற துறைகளும் கணக்கில் இல்லை" என்று அவர் கூறினார்.

சிலாங்கூர் மாநிலச் சட்டசபையில் நேற்று  நடைபெற்ற சிலாங்கூர் சுல்தான் ஷராபுதீன் இத்ரிஸ் ஷா அல்ஹாஜ்  நிகழ்த்திய அரச உரைக்கு நன்றி தெரிவிக்கும்  பிரேரணையின் போது அவர் இவ்வாறு கூறினார்.

வாட்ஸ்அப், பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டா மற்றும் டிக் டோக் மூலம் அனைத்து மாநில முயற்சிகளையும் விளம்பரப்படுத்த உதவுமாறு ஜமாலியா அனைத்து நபர்களையும் ஊக்குவித்தார்.

மக்களுக்காகவும், தேசத்திற்காகவும் நாங்கள் சிறப்பாக சேவை செய்துள்ளோம் என்பதற்கு இதுவே சான்றாகும் என்றார் அவர்.

கடந்த திங்கட்கிழமை, சிலாங்கூர் சுல்தான் 14வது சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தின் ஆறாவது கால மாநாட்டின் தொடக்க விழாவின் போது 46 ISP நலத்திட்டங்களில் பங்கேற்பதற்காக சிலாங்கூரில் வாழ்பவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் மற்றும் நலத் திட்டங்களை அறிமுகப்படுத்திய மாநில அரசின் முயற்சிகளை மேன்மை தங்கிய அரசர் பாராட்டினார்.

பக்காத்தான் புதிய அரசாங்கம் 2008 ஆம் ஆண்டு தொடங்கி, சிலாங்கூர் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, மாநிலப் பொருளாதாரத்தை மக்கள் மயமாக்குவது என்ற கருப்பொருளுடன் ஏழு திட்டங்களைத் தயாரித்தது.  அது 2017 ஆம் ஆண்டில் ''மக்கள் பராமரிப்பு முயற்சியின்'' மூலம் இந்தத் திட்டம் 43 ஆக அதிகரித்தது. பின் 2019 ஆம் ஆண்டில் பல திட்டங்கள்  ஒருங்கிணைக்கப்பட்டு  புதிய  திட்டங்களுடன் 46 ஆகியுள்ளது என்றார் அவர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.