SELANGOR

மலிவு விலை வீடுகளுக்கு அதிக தேவை உள்ளது – சிலாங்கூர் மாநில அரசு

3 மார்ச் 2023, 5:24 AM
மலிவு விலை வீடுகளுக்கு அதிக தேவை உள்ளது – சிலாங்கூர் மாநில அரசு

ஷா ஆலம், மார்ச் 3: சிலாங்கூர் கூ வீடுகளுக்கு குறைந்த விலை சலுகை, மாநில அரசால் உருவாக்கப்பட்ட மலிவு விலை வீடுகளுக்கு அதிக தேவை உள்ளதற்கான காரணியாக உள்ளது என்று வசிப்பிடங்களின் எக்ஸ்கோ தெரிவித்துள்ளது.

ரோட்சியா இஸ்மாயிலின் கூற்றுப்படி, குடியிருப்புக்கான விண்ணப்பமானது ஒவ்வொரு முறையும் 300 சதவீதம் அதிகமாக உள்ளது.

"சிலாங்கூர் கூ வீடு RM42,000 முதல் RM250,000 வரை விற்கப்படுகிறது. இந்த விலை நகர்புறத்திற்கு நியாயமானது, மேலும் வீட்டுத் திட்டத்தின் இருப்பிடமும் சிறப்பான இடத்தில் அமைந்துள்ளது.

“சிலாங்கூரில், மாநில அரசு வழங்கும் மலிவு விலை வீடுகளுக்கான எப்போதும் தேவை இருப்பதால், வீடுகள் விற்கப்படவில்லை என்ற பிரச்சனை எங்களுக்கு இல்லை. பலர் இந்த திட்டத்திற்காகக் காத்திருக்கின்றனர்," என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

சிலாங்கூர்கூ வீடுகளின் வடிவமைப்பு மற்றும் தரமான கூறுகளை அவர் விளக்கினார்.

2014 ஆம் ஆண்டு அறிமுகப் படுத்தப்பட்டதில் இருந்து 372 ரூமா சிலாங்கூர் கூ திட்டங்களுக்குக் கீழ் 215,930 வீடுகளைக் கட்டுவதற்கு மாநில அரசு ஒப்புதல் அளித்ததாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரோட்சியா தெரிவித்தார்.

ஸ்மார்ட் வாடகைத் திட்டம் மற்றும் வீட்டுக் கட்டண உதவித் திட்டம் என குடியிருப்பாளர்கள் தங்கள் சொந்த வீடுகளை வாங்குவதற்கு உதவ பல திட்டங்கள் செயல்படுத்தப்படும்

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.