SELANGOR

பண்டான் இண்டா தொகுதியில் 2,565 ஷாப்பிங் வவுச்சர்கள் வழங்கப்பட்டுள்ளன

24 பிப்ரவரி 2023, 10:42 AM
பண்டான் இண்டா தொகுதியில் 2,565 ஷாப்பிங் வவுச்சர்கள் வழங்கப்பட்டுள்ளன

செராஸ், பிப் 24: பண்டான் இண்டா தொகுதியில் ஸ்கீம் மெஸ்ர ஊசிய எமாஸ் (SMUE) திட்டத்தில் பதிவு செய்த 3,985 மூத்தக் குடிமக்களில் 2,565 பேர் இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட RM150 ஷாப்பிங் வவுச்சரைப் பெற்றுள்ளனர்.

சமூகச் சேவை மையத்தின் (பிகேஎம்) மேலாளர் நரிசா ஜைன், மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்பு மீதமுள்ள 1,420 பெறுநர்கள் தங்கள் வவுச்சர்களை பெற்றுக் கொள்வதற்காக தனது தரப்பு இன்னும் காத்திருப்பதாகக் கூறினார்.

"நாங்கள் பிப்ரவரி 14 அன்று வவுச்சர்களை வழங்கினோம். இன்று கடைசி நாள். இதுவரை சராசரியாக 400 பெறுநர்கள் வவுச்சர்களை பெற மையத்திற்கு வந்துள்ளனர்.

"வவுச்சர் எடுக்காத முதியவர்களை அழைக்க சமூக ஊடகங்கள் மற்றும் வாட்ஸ்அப் மூலம் நாங்கள் தொடர்ந்து செய்திகளை பரப்புவோம்," என்று கூறினார்.

நரிசாவின் கூற்றுப்படி, அவரது தரப்பு இந்த ஆண்டு 2,000 புதிய விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.