கோலாலம்பூர், பிப் 23 - குடி நீர் கட்டணப் பாக்கி செலுத்தப்படாததால் நீர்விநியோகம் துண்டிக்கப்பட்டப் பிரச்சனைக்குச் சிறந்த தீர்வைக் குறித்து ஆலோசிக்க, தொலைத்தொடர்பு மற்றும் இலக்கவியல் துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபட்சில் பென்குருசான் ஆயர் சிலாங்கூர் சென். பென்ஹாட் மற்றும் புத்ரா ரியா அபார்ட்மென்ட் தரப்பினருடன் நாளை சந்திப்பு நடத்தவிருக்கிறார்.
ஆயர் சிலாங்கூர் நிறுவனத்திற்குத் தண்ணீர்க் கட்டணமாக 170,000 வெள்ளியைச் செலுத்தாததால் இந்த பிரச்சனை எழுந்ததாக லெம்பா பந்தாய் நாடாளுமன்ற
உறுப்பினருமான அவர் கூறினார்.
மொத்தம் 358 குடியிருப்புகள் (54.2 சதவீதம்) பராமரிப்புக் கட்டணமாக 24.7 லட்சம் வெள்ளியைச் (சராசரி வெ.6,899) செலுத்த வேண்டியுள்ளது.
நிர்வாகத்தினரால் பலமுறை நினைவூட்டப்பட்ட போதிலும் பல குடியிருப்பாளர்கள்
தங்கள் மாதாந்திர பராமரிப்பு கட்டணங்களைச் செலுத்துவதில்லை என்று அவர் கூறினார்.
குடியிருப்பாளர்களுடனான இந்தச் சந்திப்பில் தாமும் கலந்து கொள்ளவிருப்பதாகவும்
அவர் தெரிவித்தார். இதற்கிடையில், நேற்றிரவு அடுக்குமாடி குடியிருப்புக்குத் தண்ணீர் விநியோகத்தைத் தற்காலிகமாக இணைக்க ஆயர் சிலாங்கூர் ஒப்புக்கொண்டதாகவும்
அவர் கூறினார்.
- பெர்னாமா
SELANGOR
கட்டணம் செலுத்தாததால் நீர் விநியோகம் துண்டிப்பு- ஆயர் சிலாங்கூர் நிறுவனத்துடன் ஃபாஹ்மி ஃபாட்சில் சந்திப்பு
23 பிப்ரவரி 2023, 4:04 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மின்சார வாகனத் துறையில் 2 பில்லியன் ரிங்கிட் முதலீடு: சிலாங்கூரைப் பசுமைத் தொழில் நுட்ப மையமாக மாற்றத் திட்டம்
Shalini Rajamogun
5 மே 2026

national
சிலாங்கூர் சுல்தானை அவமதித்த கேலிச்சித்திரம்: 280 காவல்துறை புகார்கள் பெறப்பட்டன
Shalini Rajamogun
4 மே 2026

selangor
பெண் தொழில்முனைவோருக்கு உதவ சிலாங்கூர் ஐந்து வழிமுறைகளை முன்வைத்துள்ளது
Shalini Rajamogun, Yasmin Ramlan
29 ஏப்ரல் 2026

selangor
வறுமை ஒழிப்புத் திட்டங்களால் சிலாங்கூர் மக்களின் மகிழ்ச்சி குறியீடு உயர்வு: மந்திரி புசார்
Shalini Rajamogun, Fitri Hazim Hazam
29 ஏப்ரல் 2026

உங்கள் கருத்து என்ன?




