உலு சிலாங்கூர், பிப் 19: உலு சிலாங்கூரில் நடந்த ஜெலாஜா கித்தா சிலாங்கூர் பென்யாயாங் (ஜேகேஎஸ்பி) திட்டத்தில் சுமார் 5,000 பேர் கலந்து கொண்டனர்.
“இந்நிகழ்வு 44 மாநில அரசின் திட்டங்களை மக்களிடம் விளம்பரப்படுத்துவதற்கான அணுகுமுறைகளில் ஒன்றாகும்.
இந்நிகழ்வில் பத்தாங் கலி நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்குப் பண நன்கொடைகள், பள்ளிக்கு திரும்புவதற்கான உதவித் திட்டம், எழுதுபொருள் உதவி மற்றும் பண்டார் சுங்கை புவாயாவில் உள்ள தனிப்பட்ட வீட்டு உரிமையாளர்களின் உரிமை ஒப்புதல் கடிதம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு வகையான உதவிகள் வழங்கப்பட்டன.
மேலும், மாநில அரசு மக்களுக்காகச் செயல்படுத்தும் திட்டங்களைப் பற்றிய விரிவான தகவல்களைப் பார்வையாளர்களுக்கு இந்நிகழ்வு மூலம் தெரிவிக்கப்பட்டது.








