ஷா ஆலம், பிப் 15: மேரு மாநிலச் சட்டமன்றத்தில் (டுன்) 1,127 குடும்பங்கள் இந்த ஆண்டுக்கான பந்துவான் கெயிடுபான் செஜாத்ரா சிலாங்கூர் (பிங்காஸ்) உதவி திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளன.
மேரு மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் சிறப்பு அதிகாரி நோர்லேனா நயன் கூறுகையில், RM300 மாதாந்திர உதவியைப் பெற தகுதியான குடும்பங்கள் தேர்ந்தெடுக்கப் படுவதற்கு முன் அனைத்து ஆன்லைன் விண்ணப்பங்களும் பார்வையிடப்படும் என்றார்.
"தகுதியுள்ளவர்கள் மட்டுமே இந்த உதவியைப் பெறுவதை உறுதிப்படுத்த நாங்கள் விண்ணப்பதாரரின் வீட்டிற்குச் செல்வோம், ஆனால் அதற்கு முன் அவர்களின் ஆவணங்களைச் சரி பார்ப்போம்.
"இருப்பினும், இந்த ஆண்டு மேரு மாநிலச் சட்டமன்றத்திற்கான பெறுநர் ஒதுக்கீடு இன்னும் முடிவு செய்யப்படவில்லை, எனவே நாங்கள் அதற்காகக் காத்திருக்கிறோம்," என்று அவரை இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.
இந்த திட்டம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, மாநிலச் சட்டமன்றத்தில் உள்ள 506 குடும்பங்கள் இந்த உதவியின் பலனைப் பெற்றுள்ளதாக நோர்லேனா கூறினார்.
"மாநில அரசு பிங்காஸ் ஒதுக்கீட்டை அதிகரிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம், இதனால் அதிகமான குடும்பங்கள் இந்த உதவியைப் பெற முடியும் ," என்று அவர் கூறினார்.
இந்த உதவியைப் பெறும் ஒவ்வொரு குடும்பமும் மாதத்திற்கு RM300 அல்லது வருடத்திற்கு RM3,600 உதவியைப் பெறுவார்கள். அப்பணம் பெறுநருக்குச் செலவு செய்வதை எளிதாக்குவதற்காக ``Wavpay இ-வாலட்`` செயலி மூலம் வழங்கப்படும்.








