SELANGOR

பொதுப் பூங்கா வசதிகளை மேம்படுத்தும் திட்டம் நிறைவடைந்தது - பெட்டாலிங் ஜெயா நகராட்சி கழகம்

15 பிப்ரவரி 2023, 4:42 AM
பொதுப் பூங்கா வசதிகளை மேம்படுத்தும் திட்டம் நிறைவடைந்தது - பெட்டாலிங் ஜெயா நகராட்சி கழகம்

ஷா ஆலம், பிப் 15: பெட்டாலிங் ஜெயா நகராட்சி கழகத்தால் (MBPJ)  மேற்கொள்ளப்பட்ட SS 2/13 பெட்டாலிங் ஜெயா பொதுப் பூங்காவில் உள்ள வசதிகளை மேம்படுத்தும் திட்டம் கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி முடிவுற்ற பிறகு, அவ்விடத்தை சுற்றி வசிப்பவர்கள் இப்போது மிகவும் வசதியாக ஓய்வெடுக்க ஏதுவாக உள்ளது.

செப்டம்பர் 26 ஆம் தேதி தொடங்கப்பட்ட மேம்பாட்டு பணி ஜனவரி 2 ஆம் தேதி முடிவடைய இருந்தது, ஆனால் வானிலை காரணத்தால் ஒரு மாதம் தாமதமானது என்று அதன் பிரதிநிதி கூறினார்.

அவர் கூறுகையில், மேம்படுத்தப்பட்ட வசதிகளில் கூடைப்பந்து மைதானம், பூப்பந்து மைதானம் மற்றும் 600 மீட்டர் நீள நடைபாதை ஆகியவை அடங்கும்.

"மேலும், இடமாற்றம் செய்யப்பட்ட விளையாட்டு மைதானம் மீண்டும் வர்ணம் பூசப்பட்ட மற்றும் ஒரு புதிய ``EPDM`` (செயற்கை ரப்பர்) தளம் நிறுவப்பட்டது. அதே நேரத்தில் ஊனமுற்றவர்களுக்கான வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

"அங்கு மூன்று செட் உடற்பயிற்சி உபகரணங்களும் நிறுவப்பட்டுள்ளன. மேலும் தூய்மையை உறுதிப்படுத்த மூன்று புதிய குப்பைத் தொட்டிகள் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளது," என்று அவர் கூறினார். அதன்படி, மேம்படுத்தப்பட்ட வசதிகள் குடியிருப்பாளர்கள் அடிக்கடி உடற்பயிற்சி செய்ய ஊக்குவிக்கும் என்று அவர் நம்புகிறார்.

"இந்த மேம்பாட்டு பணிக்கா  பெட்டாலிங் ஜெயா நகராட்சி கழகத்திற்கு நாங்கள் நன்றி கூறுகிறோம், மேலும் சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்க குடியிருப்பாளர்களை கேட்டுக்கொள்கிறோம், இதனால் அதிகமான குடியிருப்பாளர்கள் இவ்விடத்திற்கு வந்து உடற்பயிற்சியை மேற்கொள்ள முடியும்," என்று அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.