SELANGOR

இன்று மதிய நிலவரப்படி நீர் விநியோகம் 94 சதவீதம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது

13 பிப்ரவரி 2023, 12:01 PM
இன்று மதிய நிலவரப்படி நீர் விநியோகம் 94 சதவீதம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது

ஷா ஆலம், பிப். 13: ரந்தாவ் பஞ்சாங் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் (எல்ஆர்ஏ) ஏற்பட்ட மாசுபாடு காரணமாக நீர் விநியோகத் தடை ஏற்பட்டது. இன்று மதியம் 12 மணி நிலவரப்படி நீர் விநியோகம் 94 சதவீதம் இயல்பு நிலையை எட்டியுள்ளது.

உலு சிலாங்கூர், கோம்பாக், பெட்டாலிங் மற்றும் கோலா லங்காட் ஆகிய பகுதிகள் மீட்கப்பட்டதாக பென்குருசன் ஆயர் சிலாங்கூர் தெரிவித்துள்ளது.

கோலா சிலாங்கூரில் மீட்பு நிலை 99 சதவீதத்தை எட்டியுள்ள நிலையில் கிள்ளான் மற்றும் ஷா ஆலமில் 83 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

"நீர் விநியோகத்தை மீட்டெடுப்பதற்கான காலம் பயனரின் இருப்பிடம் மற்றும் தூரத்தைப் பொறுத்து ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு வேறுபடும்.

இன்னும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு செயல்முறை திட்டமிட்டபடி சீராக நடைபெறுவதை உறுதி செய்ய, நீர் விநியோகத்தைப் பெற்ற பயனர்கள் அதை விவேகத்துடன் பயன்படுத்துமாறு ஆயர் சிலாங்கூர் கேட்டுக்கொள்கிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.