SELANGOR

சுகாதார அமைச்சு மாநிலத்தின் ஒட்டுமொத்த  சுகாதார வசதிகளின் தேவைகளைக் கண்காணிக்க வேண்டும் - சுல்தான்

9 பிப்ரவரி 2023, 9:00 AM
சுகாதார அமைச்சு மாநிலத்தின் ஒட்டுமொத்த   சுகாதார வசதிகளின் தேவைகளைக் கண்காணிக்க வேண்டும் - சுல்தான்

கோலா சிலாங்கூர், பிப் 9: மாட்சிமை மிக்க சிலாங்கூர் சுல்தான் சுகாதார அமைச்சகத்தை (KKM) மாநிலத்தின் ஒட்டுமொத்த சுகாதார வசதிகளின் தேவைகளைக் கண்காணிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

ஏழு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இம்மாநிலத்திற்கு பல அதிநவீன சுகாதார வசதிகள் தேவை என்று சுல்தான் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் கூறினார்.

மருத்துவமனையில் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் வார்டிற்கு அனுப்பும் முன் அவசர சிகிச்சைப் பிரிவில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

"மேலும், அறுவை சிகிச்சை மற்றும் மேல் சிகிச்சைக்காக மாதக் கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது.

"எனவே, மருத்துவமனைகள் மற்றும் சுகாதாரக் கிளினிக்குகளின் உபகரணங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன், அதே நேரத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்" என்று தஞ்சோங் காராங் மருத்துவமனையின் திறப்பு விழாவில் இன்று அவர் இவ்வாறு கூறினார்.

``மருத்துவமனைகளில் சுகாதாரச் சேவைகள் நல்ல மற்றும் திறமையான மேலாண்மை அமைப்பைக் கொண்டிருக்க வேண்டும்; இதன் மூலம் மக்களுக்கு உயர்தர சேவைகளை வழங்குவதற்கான உபகரணங்கள் மற்றும் உள் கட்டமைப்பு எப்போதும் நல்ல நிலையில் இருக்கும்,`` எனத் தெரிவித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.