SELANGOR

பண்டிகைகள் நட்புறவைப் பலப்படுத்துகின்றன - டத்தோ மந்திரி புசார்

7 பிப்ரவரி 2023, 9:26 AM
பண்டிகைகள் நட்புறவைப் பலப்படுத்துகின்றன - டத்தோ மந்திரி புசார்

ஷா ஆலாம், பிப் 7: பண்டிகைகளைக் கொண்டாடுவது நட்புறவை வலுப்படுத்துவதுடன் மற்றவர்களின் நலனை விசாரிக்கவும் ஒரு நல்ல வாய்ப்பாக அமைகிறது என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்.

கடந்த சீனப் புத்தாண்டின் போது கோம்பாக்கைச் சுற்றியுள்ள நெருங்கிய நண்பரின் வீட்டிற்குச் சென்ற போது இந்த விஷயத்தை உணர்ந்ததாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

"கோவிட் -19 தொற்று நோயை எதிர் கொண்ட பிறகு இந்த ஆண்டு மிகவும் அசாதாரணமான உற்சாகத்தை என்னால் உணர முடிகிறது.

"எல்லோரும் ஒருவருக்கொருவர் அன்பாக இருப்பது மிகவும் நல்லது. இந்த ஒற்றுமை உணர்வை நாம் பேண வேண்டும்," என்று அவர் முகநூலில் ஒரு வீடியோ மூலம் தெரிவித்தார்.

கடந்த சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, உலு கிளாங், கோம்பாக் செத்தியா மற்றும் சுங்கை துவா ஆகிய இடங்களில் உள்ள ஐந்து சீன நண்பர்களின் வீடுகளுக்குத் தான் சென்றதாகக் கூறினார்.

அவர்கள் சீனப் புத்தாண்டை கொண்டாடினாலும் மலாய் ஆடைகளை அணிந்திருந்தது தன் கவனத்தை ஈர்த்தது என்று அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.