செமினி, ஜன 30- சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக கடந்த 2013 ஆம்ஆண்டு பதவியேற்றது முதல் இது வரை 200 கோவில்களுக்கும் 20 தமிழ்ப்
பள்ளிகளுக்கும் நிலப் பட்டா வழங்கப்பட்டிருப்பதாக வீ. கணபதி ராவ் தெரிவித்தார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் சிலாங்கூர் மாநில இந்தியர்களுக்கு மாநில அரசு பல
வகைகளில் பேருதவி புரிந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தமிழ் பள்ளிகளுக்கு 50 லட்சம் வெள்ளி, கோவில்களுக்கு 18 லட்சம் வெள்ளி, வசதி குறைந்த தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு 10 லட்சம் வெள்ளி இலவசப் பேருந்து கட்டணம், உயர்கல்வி பயிலும் இந்திய மாணவர்களுக்கு 30 லட்சம் வெள்ளி
கல்வி நிதி மற்றும் சிறு தொழில் இந்திய வணிகர்களுக்கு உதவ 10 லட்சம் வெள்ளி
வழங்கப்பட்டு வருகிறது என்று அவர் சொன்னார்.
உலு லங்காட் கெஅடிலான் தொகுதி தலைவர் இராஜன் முனுசாமி, காஜாங் கவுன்சிலர் தியாகராஜன், இராமச்சந்திரன், சந்திரன் இராமசாமி, கிராமத் தலைவர் நடேசன், ராஜ்குமார் ஆகியோர் ஏற்பாட்டில் செமினி பண்டார் ரிஞ்சிங்கில் சிலாங்கூர் மாநிலத் தைப்பொங்கல் விழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
உலுலங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் முகமது சானி ஹண்சான், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ கணபதி ராவ் தலைமையில் நடைபெற்ற இந்த
தைப்பொங்கல் விழாவில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து சிறப்பித்தனர்.
தமிழர்களின் பாரம்பரிய விழாவாக விளங்கும் தைப் பொங்கல் ஒவ்வொரு ஆண்டும்
உலுலங்காட் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு
வருவது பாராட்டுக்குரியது.
SELANGOR
சிலாங்கூரில் 200 ஆலயங்கள், 20 தமிழ்ப்பள்ளிகளுக்கு நிலப்பட்டா- கணபதி ராவ் தகவல்
30 ஜனவரி 2023, 3:49 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
புக்கிட் அந்தாராபங்சா தொகுதியில் 296 மாணவர்களுக்கு ‘மீண்டும் பள்ளிக்குச் செல்வோம்’ திட்டத்தின் கீழ் கல்வி உதவி வழங்கப்பட்டது
Shalini Rajamogun
25 மார்ச் 2026

selangor
லெமாங், கெதுப்பாட், பட்டாசு விற்பனை: கடும் நிபந்தனைகளை விதித்தது அம்பாங் ஜெயா நகராண்மை கழகம்
Shalini Rajamogun
20 மார்ச் 2026

selangor
சிலாங்கூர் மாநிலத்தின் உணவு இருப்பு 6 மாதங்களுக்கு உயர்த்தப்படும் – மந்திரி புசார் அறிவிப்பு
Shalini Rajamogun
20 மார்ச் 2026

national
மலேசியாவின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
Shalini Rajamogun
20 மார்ச் 2026

உங்கள் கருத்து என்ன?




