ECONOMY

கோவிட்-19 நோய்த் தொற்றினால் 258 பேர் பாதிப்பு- இருவர் மரணம்

29 ஜனவரி 2023, 10:44 AM
கோவிட்-19 நோய்த் தொற்றினால் 258 பேர் பாதிப்பு- இருவர் மரணம்

ஷா ஆலம், ஜன 29- நாட்டில் நேற்று 258 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டனர். நேற்றைய தொற்றுகளுடன் சேர்த்து நாட்டில் இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 50 லட்சத்து 35 ஆயிரத்து 871 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி நாட்டில் 9,496 பேர் கோவிட்- நோய்த் தொற்றின் தீவிர பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.

சிலாங்கூரில் மிக அதிகமாக அதாவது 104 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனை அடுத்து கோலாலம்பூரில் 51 பேரும் புத்ராஜெயாவில 22 பேரும் ஜொகூர் மற்றும் சரவாவில் தலா 17 பேரும் பேராக்கில் 14 பேரும் பினாங்கில் 8 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மலாக்காவில் அறுவருக்கும் நெகிரி செம்பிலானில் ஐவருக்கும் திரங்கானுவில் மூவருக்கும் கிளந்தான், பெர்லிஸ், சபா மற்றும் லபுவானில் தலா ஒருவருக்கும் இந்நோய் கண்டுள்ளது.

கோவிட்-19 நோய்த் தொற்றுடன் தொடர்புடைய இரு மரணச் சம்பவங்கள நேற்று பதிவாகின. இதனுடன் சேர்த்து கடந்த 2020 பிப்ரவரி மாதம் கோவிட்-19 நோய்த் தொற்று பரவியது முதல் இதுவரை 36,940 பேர் இந்நோய்க்கு பலியாகியுள்ளனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.