SELANGOR

மழையைப் பொருட்படுத்தாமல் மக்கள் சிலாங்கூர் மலிவு விற்பனையில் கலந்து கொண்டனர்

22 ஜனவரி 2023, 5:27 AM
மழையைப் பொருட்படுத்தாமல் மக்கள் சிலாங்கூர் மலிவு விற்பனையில் கலந்து கொண்டனர்

ஷா ஆலம், ஜன. 22: நேற்று காலை செக்‌ஷன் 24 கில் எஹ்சான் சிலாங்கூர் விற்பனை (JER) திட்டத்தின் கீழ் மலிவு விற்பனை நடைபெற்றது. மழை பெய்தாலும் மக்கள் அதை பொருட்படுத்தாமல் வரிசையில் நின்று பொருட்களை வாங்கினர்.

ஷா ஆலம் நகர சபையின் மக்கள் பிரதிநிதி கவுன்சில் (MPP) பகுதி 8 இன் உறுப்பினர், சித்தி நூர் அயிஷா முகமட் சாய் கூறுகையில், மழை இருந்தபோதிலும், குடியிருப்பாளர்கள் காலை மணி 8 முதல் தங்கள் முறைக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூடாரங்களில் காத்திருந்தனர்.

" ஆறு தன்னார்வலர்களின் உதவியால் விற்பனை சீராக நடந்தது. அவர்கள் குடியிருப்பாளர்களின் வரிசையைக் கண்காணிக்க உதவினார்கள்," என்று அவர் கூறினார்.

மேலும், சிதி நூர் ஆயிஷா கூறுகையில், நன்கு விற்பனையாகும் மற்றும் பொதுமக்களால் அடிக்கடி தேடப்படும் அத்தியாவசியப் பொருள்கள் கோழி, முட்டை மற்றும் அரிசி ஆகியவை ஆகும். உதாரணமாக, ஒரு மணி நேரத்தில் கிட்டத்தட்ட 300 கோழிகள் விற்கப்பட்டுள்ளன.

இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயன்பெறும் மலிவான விற்பனைத் திட்டம் ஜனவரி 15 முதல் மார்ச் வரை ஒவ்வொரு நாளும் 11 இடங்களில் நடத்தப்படுகிறது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.