SELANGOR

சிலாங்கூர் பொது நூலகக் கழகம் மக்களிடத்தில் வாசிப்பு கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்குப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துகிறது

17 ஜனவரி 2023, 10:04 AM
சிலாங்கூர் பொது நூலகக் கழகம் மக்களிடத்தில் வாசிப்பு கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்குப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துகிறது

ஷா ஆலம், ஜன 17: சிலாங்கூர் பொது நூலகக் கழகம் (பிபிஏஎஸ்) மக்களை நூலகத்திற்குச் செல்வதற்கும், அவர்களிடத்தில் வாசிப்பு கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துகிறது.

மார்ச், ஜூன், ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களில் பள்ளி விடுமுறை நாட்கள் முழுவதும் மேற்கொள்ளப்படும் பள்ளி விடுமுறை நடவடிக்கைகள் இதில் உள்ளடங்குவதாக டத்தின் படுகா மஸ்துரா முஹமட் தெரிவித்தார்.

"இந்த நடவடிக்கைகள் ராஜா துன் உடா நூலகத்தில் மட்டுமல்ல, சிலாங்கூர் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட நூலகங்களிலும் நடத்தப்படுகிறது.

"ஆக்கப்பூர்வமான வடிவமைப்பு, 3டி வடிவமைப்பு, ரோபாட்டிக்ஸ் மற்றும் உணவு தயாரிப்பு வகுப்புகள் ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன," என்று அவர் சிலாங்கோர்கினியிடம் கூறினார்.

மஸ்துராவின் கூற்றுப்படி, தொற்றுநோய் இசை உலகில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, எனவே இந்தத் துறையையும் மேம்படுத்த உதவுவதற்காக, சவுண்ட் ஸ்டுடியோ@PPAS உருவாக்கப்பட்டுள்ளது,`` என்றார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.