SELANGOR

சிலாங்கூர் சாரிங் இலவச மருத்துவ பரிசோதனை திட்டம் பிப்ரவரி தொடங்கும்

17 ஜனவரி 2023, 5:06 AM
சிலாங்கூர் சாரிங் இலவச மருத்துவ பரிசோதனை திட்டம் பிப்ரவரி தொடங்கும்

ஷா ஆலம், ஜன 17: சிலாங்கூர் சாரிங் இலவச மருத்துவ பரிசோதனை திட்டம் பிப்ரவரி தொடக்கத்தில் இருந்து தொடரும் என்று மாநிலப் பொதுச் சுகாதார ஆலோசகர் தெரிவித்தார்.

டாக்டர் மொஹமட் ஃபர்ஹான் ருஸ்லி கூறுகையில், இந்த திட்டத்தின் வழி நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து தகுந்த சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்டவை ஜூன் மாத தொடக்கத்தில் மேற்கொள்ளப்படும் என்றார்.

“கடந்த ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்ட முன்னோட்டத் திட்டம் முடிவடைந்தது. அதன் வரவேற்பு மிகவும் ஊக்கமளிக்கும் வகையில் இருந்தது மற்றும் அதன் விளைவு மக்களின் சுகாதார நிலை மிகவும் நன்றாக இருப்பதைக் காண்கிறோம்.

"கடந்த ஆண்டு திட்டத்தின் அடிப்படையில் அவசியமாகக் கருதப்படும் பிற நோய்களுக்கு ஸ்கிரீனிங் வழங்குவதைத் தவிர, இந்த முறை நாங்கள் பல நடைமுறைகளை மேம் படுத்தியுள்ளோம். இந்த திட்டம் சமூகத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று நாங்கள் நம்புகிறோம்" என்று சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

கடந்த ஆண்டு மே முதல் செப்டம்பர் வரையிலான திட்டத்தில் குடும்ப மருத்துவ வரலாறு, உடல் பருமன் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை கொண்ட நபர்களை இலக்காகக் கொண்டு RM3.4 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அந்தக் காலகட்டத்தில், 45,000-க்கும் மேற்பட்ட நபர்கள் உடல்நலப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர், மேலும் 4,809 நபர்கள் மேல் சிகிச்சையைப் பெற அறிவுறுத்தப்பட்டனர்.

சிலாங்கூர் சாரிங் இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகள், கண் பரிசோதனைகள், கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோய் பரிசோதனைகள், பெருங்குடல் மல இரத்த பரிசோதனைகள் மற்றும் புரோஸ்டேட் சோதனைகள் ஆகியவற்றையும் வழங்குகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.