SELANGOR

நவீன விவசாயத்தில் ஈடுபட பெண்கள் மற்றும் இளைஞர்களை ஊக்குவிக்கிறது சிலாங்கூர் மாநிலம்

9 ஜனவரி 2023, 12:01 PM
நவீன விவசாயத்தில் ஈடுபட பெண்கள் மற்றும் இளைஞர்களை ஊக்குவிக்கிறது சிலாங்கூர் மாநிலம்

ஷா ஆலம், ஜனவரி 9: நவீன விவசாயத்தில் ஈடுபட பெண்கள் மற்றும் இளைஞர்களை ஊக்குவிக்க சிலாங்கூர் மாநிலம் வேளாண் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தை விரிவுபடுத்த விரும்புகிறது.

இத்துறையில் ஈடுபடுவோருக்கு வருமானம் ஈட்ட உதவுவதுடன், இளம் விவசாய தொழில்முனைவோரை உருவாக்குவதையும் இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று விவசாய எஸ்கோ இர் இஷாம் அசிம் கூறினார்.

“உலு லங்காட்டில் இறால் திட்டம் போன்ற வெற்றிகரமான விவசாயத் துறைகளை விரிவுபடுத்தி இளைஞர்கள் நேரடியாக ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை வழங்குவோம்.

"அதே திட்டத்தை மேலும் இரண்டு புதிய மாவட்டங்களில் விரிவுபடுத்துவோம், ஏனெனில் விவசாய தொழில்முனைவோராக அவர்களின் ஈடுபாட்டை அதிகரிக்க நாங்கள் விரும்புகிறோம். இதனால் விவசாய தொழில் முனைவோர் என்ற ஒரு புதிய குழுவை உருவாக்குகிறோம்," என்று அவரை இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.

இத்திட்டம் வெற்றி அடைவதை உறுதி செய்ய, சிலாங்கூர் அக்ரோ ஐகான் வெற்றியாளர்கள் சம்பந்தப்பட்ட குழுக்களுக்கு தகுந்த வழி காட்டியாக இருப்பார்கள் என்றார்.

விவசாயம் என்பது அசுத்தமான மற்றும் கடினமான வேலை என்ற சமூகத்தின் கருத்தை மாற்றவும் இந்த திட்டம் உதவும் என்றார்.

மாநில அரசு வேளாண்மை, தொழில் முனைவோருக்கான பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் வழங்குதல், பொருட்களை சந்தைப்படுத்தல் அடிப்படையில் பல்வேறு உதவிகளை வழங்குகிறது என்றார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.