SELANGOR

குறைந்த கார்பன் தின நிகழ்ச்சியில் சுமார் 1,600 பேர் கலந்து கொண்டனர்

8 ஜனவரி 2023, 4:40 AM
குறைந்த கார்பன் தின நிகழ்ச்சியில் சுமார் 1,600 பேர் கலந்து கொண்டனர்

கோலா லங்காட், ஜன. 8: இங்குள்ள பண்டார் ரிம்பாயு, ஜாலான் ஃப்ளோரா 2 இல் நேற்று நடந்த குறைந்த கார்பன் தின நிகழ்ச்சியில் சுமார் 1,600 பேர் கலந்து கொண்டனர்.

எம்.பி.கே.எல் இந்த நிகழ்ச்சியை முதல் முறையாக ஏற்பாடு செய்திருக்கிறது, அதற்கான ஆதரவு மிகவும் ஊக்கமளிக்கும் வகையில் உள்ளதாகவும், அதனால் ஒவ்வொரு மாதமும் வாரத்தின் முதல் சனிக்கிழமையில் இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றும் கோலா லங்காட் முனிசிபல் கவுன்சில் (எம்பிகேஎல்) தலைவர் டத்தோ அமிருல் அசிசான் அப்ட் ரஹீம் கூறினார்.

எம்.பி.கே.எல் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் பண்டார் ரிம்பாயு, இக்கோ சென்சுவரி, கமுடா 257, தொராபிகானா அமான் ஆகிய இடங்களில் இந்நிகழ்ச்சி மாறி மாறி நடைபெறும்,” என்று அவர் கூறினார்.

நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய பின்னர் அவர் இவ்வாறு கூறினார்.

இந்நிகழ்ச்சியின் மூலம் எம்.பி.கே.எல் சமூகத்தின் மத்தியில் பசுமையான நடைமுறைகள் மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதோடு, கார்பன் உமிழ்வு விகிதத்தை 2030க்குள் 45 சதவிகிதம் குறைக்கும் முடியும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.

காலை 7.30 மணி முதல் மதியம் 12 மணி வரை பல்வேறு சுவாரசியமான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கோ பெயிண்ட், ஈகோ ஃப்ரீ மார்க்கெட், ஈகோ ஃபேஷன் ஷோ மற்றும் ஸ்ட்ரீட் ஃபுட் பால் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மேலும், 5 கிலோ மீட்டர் மெது ஓட்டம், குழந்தைகளுக்கான மிதிவண்டியை தள்ளுதல் மற்றும் பறவைகளுடன் நேரத்தைச் செலவிடுதல் போன்ற நடவடிக்கைகளும் பொது மக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.