SELANGOR

உணவகத் துறையினர் முகக்  கவரி அணிவதை ஊக்குவிக்கக் காஜாங் நகராண்மைக் கழகம் நடவடிக்கை

4 ஜனவரி 2023, 9:09 AM
உணவகத் துறையினர் முகக்  கவரி அணிவதை ஊக்குவிக்கக் காஜாங் நகராண்மைக் கழகம் நடவடிக்கை

காஜாங், ஜன, 4-  உணவக நடத்துநர்கள் மற்றும் உணவு அங்காடி வணிகர்கள்

முகக்கவரி அணிவதை ஊக்குவிக்கும் முயற்சியில் காஜாங் நகராண்மைக் கழகம்

தீவிரம் காட்டவுள்ளது.

முகக் கவரி அணிவது தொடர்பான அறிக்கை கடந்த நவம்பர் மாதமே

விநியோகிக்கப்பட்டுவிட்டதாக நகராண்மைக் கழகத் தலைவர் நஜ்முடின் ஜெமாய்ன் கூறினார்.

அமலாக்க ரீதியில் யாருக்கும் இதுவரை  குற்றப்பதிவு வழங்கவில்லை. இந்த உத்தரவை உணவகப் பணியாளர்கள் உள்ளிட்டத் தரப்பினர் பின்பற்றுவதை உறுதி செய்ய

அவர்களுக்கு நினைவூட்டல்களை மட்டுமே வழங்குகிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

நேற்று நடைபெற்ற 2023 ஆண்டிற்கான காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினர்களின் பதவியேற்பு சடங்கிற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

சிலாங்கூரில் உணவு சார்ந்த துறைகளில் தூய்மையை உறுதி செய்யும் நோக்கில்

உணவகப் பணியாளர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுவதாக  மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அண்மையில் கூறியிருந்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.