காஜாங், ஜன, 4- உணவக நடத்துநர்கள் மற்றும் உணவு அங்காடி வணிகர்கள்முகக்கவரி அணிவதை ஊக்குவிக்கும் முயற்சியில் காஜாங் நகராண்மைக் கழகம்
தீவிரம் காட்டவுள்ளது.
முகக் கவரி அணிவது தொடர்பான அறிக்கை கடந்த நவம்பர் மாதமே
விநியோகிக்கப்பட்டுவிட்டதாக நகராண்மைக் கழகத் தலைவர் நஜ்முடின் ஜெமாய்ன் கூறினார்.
அமலாக்க ரீதியில் யாருக்கும் இதுவரை குற்றப்பதிவு வழங்கவில்லை. இந்த உத்தரவை உணவகப் பணியாளர்கள் உள்ளிட்டத் தரப்பினர் பின்பற்றுவதை உறுதி செய்ய
அவர்களுக்கு நினைவூட்டல்களை மட்டுமே வழங்குகிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.
நேற்று நடைபெற்ற 2023 ஆண்டிற்கான காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினர்களின் பதவியேற்பு சடங்கிற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
சிலாங்கூரில் உணவு சார்ந்த துறைகளில் தூய்மையை உறுதி செய்யும் நோக்கில்
உணவகப் பணியாளர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அண்மையில் கூறியிருந்தார்.
SELANGOR
உணவகத் துறையினர் முகக் கவரி அணிவதை ஊக்குவிக்கக் காஜாங் நகராண்மைக் கழகம் நடவடிக்கை
4 ஜனவரி 2023, 9:09 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
புக்கிட் அந்தாராபங்சா தொகுதியில் 296 மாணவர்களுக்கு ‘மீண்டும் பள்ளிக்குச் செல்வோம்’ திட்டத்தின் கீழ் கல்வி உதவி வழங்கப்பட்டது
Shalini Rajamogun
25 மார்ச் 2026

selangor
லெமாங், கெதுப்பாட், பட்டாசு விற்பனை: கடும் நிபந்தனைகளை விதித்தது அம்பாங் ஜெயா நகராண்மை கழகம்
Shalini Rajamogun
20 மார்ச் 2026

selangor
சிலாங்கூர் மாநிலத்தின் உணவு இருப்பு 6 மாதங்களுக்கு உயர்த்தப்படும் – மந்திரி புசார் அறிவிப்பு
Shalini Rajamogun
20 மார்ச் 2026

national
மலேசியாவின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
Shalini Rajamogun
20 மார்ச் 2026

உங்கள் கருத்து என்ன?




