காஜாங், ஜன.4: காஜாங் நகராட்சி கவுன்சில் (எம்பிகேஜே) இந்த ஆண்டு மாநகர அந்தஸ்தை அடைய உறுதிபூண்டுள்ளது என்று அதன் தலைவர் கூறினார்.
மாநகர அந்தஸ்தை அடைய முடியுமா என்ற மாநில அரசின் முடிவுக்காகத் தனது தரப்பு இன்னும் காத்திருப்பதாக நஜ்முதீன் ஜெமைன் கூறினார்.
"நாங்கள் மாற்றங்களைச் செய்யவில்லை (சொத்துகளின் மறுபெயரிடுதல்). மாநில அரசு அளவில், காஜாங் நகராட்சி கவுன்சில் மாநகர அந்தஸ்துக்கு தரம் உயர்த்தப்படலாமா என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை.
2023ஆம் ஆண்டுக்கான கவுன்சிலர்களின் பதவியேற்பு விழாவிற்குப் பிறகு சந்தித்தபோது, " காஜாங் நகராட்சி கவுன்சிலில் அனைத்து அம்சங்களிலும் சேவைத் திறனை மேம்படுத்துவது உள்ளிட்ட திட்டங்களை நாங்கள் ஏற்கனவே வைத்திருக்கிறோம்," என்று அவர் கூறினார்.
முன்னதாக, நகரத்தை நோக்கிய முயற்சியாக கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து நகரத்தின் சொத்துக்களின் மறுபெயரிடுதலை செயல்படுத்தப்பட்டது.
சமூக மண்டபங்கள், விளையாட்டு வளாகங்கள், காஜாங் ஸ்டேடியம், பேருந்து நிறுத்தங்கள், பொது பொழுதுபோக்கு பூங்காக்கள், சுற்றுலா இடங்கள், வீடமைப்பு பகுதிகள் மற்றும் உணவு வளாகங்கள் ஆகியவை சொத்துக்களில் அடங்கும்.








