சிப்பாங், ஜன 4: உணவுப் பொருட்களை கையாளும் போது முகக்கவரி அணிவதைப் பயிற்சி செய்ய, உணவு வியாபாரிகள் மற்றும் உணவகங்களை நடத்துபவர்களுக்கு சிப்பாங் முனிசிபல் கவுன்சில் ஒரு மாத கால அவகாசம் அளித்துள்ளது.
வணிகர்களின் தூய்மையின் அளவை உறுதி செய்வதற்காக முகக் கவரியை அணிவதைக் கட்டாயம் ஆக்குவதற்கான உத்தரவு மாநில அரசால் முடிவு செய்யப்பட்டுள்ளதாக யாங் டிபெர்துவான் டத்தோ அப்துல் ஹமீட் ஹுசைன் கூறினார்.
"நாங்கள் முதலில் ஒரு மாதத்திற்குள் வர்த்தகர்களுக்கு ஆலோசனை வழங்குவோம், அவர்கள் கடைப்பிடிக்க தவறினால், தற்போதுள்ள சட்டங்களின்படி தகுந்த நடவடிக்கைகள் விதிக்கப்படும்.
"உரிமம், அமலாக்கம் மற்றும் சுகாதாரம் போன்ற பல துறைகளால் கண்காணிப்பு செய்யப்படும். உரிம நிபந்தனைகளில் இது சேர்க்கப்பட்டுள்ளது, உரிமம் பெறும் உணவகங்களின் உரிமையாளர்கள் அதற்கு இணங்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று அவர் கூறினார்.
கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி, உணவுக் கையாளுதலில் தூய்மையை மேம்படுத்துவதற்காக, ஜனவரி 1 முதல் மாநிலத்தில் உணவு வியாபாரிகள் மற்றும் உணவகங்களை நடத்துபவர்கள் முகக்கவரி பயன்படுத்துவது கட்டாயம் என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்.
இந்த அணுகுமுறையானது கோவிட்-19 பரவுவதை தவிர்ப்பதோடு, உணவு நச்சுத்தன்மையும் தவிர்த்து வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும் அதிகரிக்கச் செய்யும் என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.








