ஷா ஆலம், டிச 28- கோல சிலாங்கூரில் உள்ள புக்கிட் மெலாவத்தி சுற்றுலாமையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மரம் விழுந்து நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில்
தடுப்புச் சுவர் கட்டும் பணியை கோல சிலாங்கூர் நகராண்மைக் கழகம்
தொடக்கியுள்ளது.
அந்த மண்சரிவு சம்பவத்தின் விளைவாக சேதமடைந்த கரையை சரிசெய்ய ஐந்து
மீட்டர் உயர கான்கிரீட் சுவர் எழுப்பும் பணி தற்போது மேற்கொள்ளப்படும் நிலையில் இப்பணி அடுத்த மாத இறுதிக்குள் முற்றுப் பெறும் என்று நகராண்மைக் கழகத்தின் துணைச் செயலாளர் அகமது ஜம்சுரி முஜைனி கூறினார்.
மலைப்பாங்கான அல்லது சரிவானப் பகுதிகளை திட்டமிடுதல் மற்றும் நிர்வகித்தல் தொடர்பான ஆலோசனை சேவைகளை வழங்குவதற்கு மலைச்சாரல் சார்ந்த விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்ற பொதுப்பணித்துறை அல்லது பிற ஊராட்சி மன்றங்களின் சேவையைத் தாங்கள் கோரவுள்ளதாக அவர் பெர்னாமாவிடம் கூறினார்.
மலைப் பகுதியில் பாறைகள் ஊடே வளரும் மரங்கள் வலுவாக வேர் பிடிக்க முடியாத காரணத்தால் மரங்கள் சாய்வது நகராண்மைக் கழக நிலவடிவமைப்புத் துறை மேற்கொண்ட ஆய்வில் தெரிவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
நிலச் சரிவு சீரமைப்பு பணிகளுக்காக புக்கிட் மெலாவத்தி சுற்றுலா மையம் நேற்று முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக நகராண்மைக் கழகம் தெரிவித்துள்ளது.
SELANGOR
புக்கிட் மெலாவத்தி சுற்றுலா மையத்தில் மரங்கள் விழுவதைத் தடுக்க தடுப்புச் சுவர் நிர்மாணிப்பு
28 டிசம்பர் 2022, 6:24 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
புக்கிட் அந்தாராபங்சா தொகுதியில் 296 மாணவர்களுக்கு ‘மீண்டும் பள்ளிக்குச் செல்வோம்’ திட்டத்தின் கீழ் கல்வி உதவி வழங்கப்பட்டது
Shalini Rajamogun
25 மார்ச் 2026

selangor
லெமாங், கெதுப்பாட், பட்டாசு விற்பனை: கடும் நிபந்தனைகளை விதித்தது அம்பாங் ஜெயா நகராண்மை கழகம்
Shalini Rajamogun
20 மார்ச் 2026

selangor
சிலாங்கூர் மாநிலத்தின் உணவு இருப்பு 6 மாதங்களுக்கு உயர்த்தப்படும் – மந்திரி புசார் அறிவிப்பு
Shalini Rajamogun
20 மார்ச் 2026

national
மலேசியாவின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
Shalini Rajamogun
20 மார்ச் 2026

உங்கள் கருத்து என்ன?




