SELANGOR

பண்டான் இண்டா மாநிலச் சட்டமன்றத்தில் 50 கிறிஸ்துவர்களுக்கு நன்கொடை வழங்கப்பட்டது

26 டிசம்பர் 2022, 2:13 AM
பண்டான் இண்டா மாநிலச் சட்டமன்றத்தில் 50 கிறிஸ்துவர்களுக்கு நன்கொடை வழங்கப்பட்டது

ஷா ஆலம், டிச.26: கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தையொட்டி பண்டான் இண்டா மாநிலச் சட்டமன்றத்தில் மொத்தம் 50 கிறிஸ்துவர்கள் நன்கொடை பெற்றனர்.

நன்கொடை பெற்ற பெரும்பாலான பயனாளிகள் B40 குழுவைச் சேர்ந்தவர்கள் என்று சட்டமன்ற உறுப்பினர் கூறினார்.

"அவர்கள் RM100 மதிப்புள்ள சமையல் எண்ணெய், மாவு மற்றும் அரிசி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் மற்றும் ரொக்கமும் நன்கொடையாகப் பெற்றனர்.

"இந்த நன்கொடையின் மூலம் அவர்களின் சுமையைக் குறைக்க முடியும், மேலும் இந்த பண்டிகையை அவர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட உதவும் முடியும்" என்று ஈர் இஷாம் ஹாஷிம் கூறினார்.

கிறிஸ்துமஸ் தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25 அன்று கிறிஸ்துவர்களால் கொண்டாடப்படுகிறது.

டிசம்பர் 13 அன்று, சிலாங்கூர் அளவிலான கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மற்றும் திறந்த இல்ல உபசரிப்பு எம்பிபிஜெ (MBPJ) சிவிக் ஹாலில் பல்வேறு இனங்களைச் சேர்ந்த 3,000 க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அவர்களின் தலைமையில் நிகழ்ந்தது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.