SELANGOR

சட்டவிரோதமாகக் கழிவுகளைக் கொட்டுவதால் ஏற்படும் துர்நாற்றத்தைத் தீர்க்க 3  மில்லியன் ரிங்கிட் அரசு ஒதுக்கியுள்ளது

13 டிசம்பர் 2022, 3:41 AM
சட்டவிரோதமாகக் கழிவுகளைக் கொட்டுவதால் ஏற்படும் துர்நாற்றத்தைத் தீர்க்க 3  மில்லியன் ரிங்கிட் அரசு ஒதுக்கியுள்ளது

ஷா ஆலம், டிச. 13: தாமான் புக்கிட் ஜலீலில் குடியிருப்புகளுக்கு அருகில் சட்டவிரோதமாக கழிவுகளை கொட்டுவதால் ஏற்படும்  துர்நாற்றத்தை கட்டுப்படுத்த  கிட்டத்தட்ட 3 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்ய மாநில அரசு ஒப்புதல்.

ஒவ்வொரு நாளும் துர்நாற்றம் வீசுவதால், 10,000க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களை பாதிக்கும் சிக்கலைத் தீர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக டத்தோ மந்திரி புசார் கூறினார்.

டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் கூற்றுப்படி, நீர்த்தேக்கத்தில் ஏற்படும் 'லீசேட்' அல்லது கழிவு நீரின் துர்நாற்றத்தை குறைக்க 'எஃபெக்டிவ் மைக்ரோபியல்' என்சைம் ஸ்ப்ரேயைப் பயன்படுத்தி நீர் சுத்திகரிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

“மாநில அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கத் தயங்குவதில்லை, நிலத்தை அபகரிக்கும் செயலுக்கு 8ஏ அறிவிப்பை வெளியிடுவதையும் நிராகரிக்கவில்லை.

"சுற்றுச்சூழல் துறைக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன, இதனால் பொறுப்பான தரப்பினருக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்," என்று அவர் முகநூலின் மூலம் கூறினார்.

நில உரிமையாளர்கள் மற்றும் தொடர்புடைய தரப்பினருக்கு கடும் எச்சரிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமிருடின் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.