SELANGOR

இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு 100 டேப்லெட்டுகள் மற்றும் மடிக்கணினிகள் வழங்கப்படும்- கோம்பாக் நாடாளுமன்றம்

12 டிசம்பர் 2022, 5:11 AM
இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு 100 டேப்லெட்டுகள் மற்றும் மடிக்கணினிகள்  வழங்கப்படும்- கோம்பாக் நாடாளுமன்றம்

கோம்பாக், டிச.12: கோம்பாக் நாடாளுமன்றத்தில், இளைஞர்கள் மற்றும் மாணவர்களின்

பயன்பாட்டிற்காக மொத்தம் 100 டேப்லெட்டுகள் மற்றும் மடிக்கணினிகள் அடுத்த

இரண்டு வாரங்களில் வழங்கப்படும் என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

15வது பொதுத் தேர்தல் (GE15) பிரச்சாரத்தின் போது கல்வி மற்றும் தொழில்

முனைவோர்களுக்கு 10,000 டேப்லெட்டுகள் மற்றும் மடிக்கணினிகளை

வழங்குவதற்கான ஆரம்பமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. நேற்று இரவு

நடைபெற்ற மக்கள் விருந்தில் ``கோம்பாக் மக்களுக்கு ஐந்து ஆண்டுகளில் இளைஞர்கள்

மற்றும் மாணவர்களின் பயன்பாட்டிற்கு 10,000 டேப்லெட்டுகள் மற்றும் மடிக்கணினிகள்

வழங்கப்படும்,`` என்ற எனது வாக்குறுதியை நான் மறக்கவில்லை. .

15வது பொதுத் தேர்தலில் கோம்பாக் நாடாளுமன்றத்தில் பக்காத்தான் ஹராப்பானின்

(ஹராப்பான்) வெற்றியைக் கொண்டாடும் வகையில் நடைபெற்ற விழாவில்

ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு ஆண்டும் 2,000 யூனிட்கள் வசதி இல்லாதவர்களுக்கு

விநியோகிக்கப்படுகின்றன. இதனால் அவர்கள் ஆன்லைன் மூலம் கற்றல் மற்றும்

வணிகத்தை மேற்கொள்ள முடியும்.

இதற்கிடையில், ஸ்ரீ கோம்பாக் பகுதியில் உள்ள குடியிருப்பு அடுக்கு மாடியின் சொத்து

உரிமைகள் தொடர்பான பல சிக்கல்கள் இந்த ஜனவரி முதல் தீர்க்கப்படும் என்று

டத்தோ மந்திரி புசார் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.