SELANGOR

``யாரையும் மறப்பதில்லை`` என்ற கொள்கைக்கு ஏற்ப சிலாங்கூர் சர்வதேசப் புத்தகக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

12 டிசம்பர் 2022, 4:00 AM
``யாரையும் மறப்பதில்லை`` என்ற கொள்கைக்கு ஏற்ப சிலாங்கூர் சர்வதேசப் புத்தகக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஷா ஆலம், டிச 12: சிலாங்கூர் சர்வதேசப் புத்தகக் கண்காட்சி (SIBF) 2022யின் அமைப்பு மாநில அரசின் 'யாரையும் மறப்பதில்லை' என்ற கொள்கைக்கு இணங்க உள்ளது.

சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் சிலாங்கூர் அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதற்கும் இது சான்றாகும் என்று ஷா ஆலம் நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.

"இந்த நிகழ்வு ஷா ஆலாம் மக்களுக்கு மட்டுமல்ல, சிலாங்கூர் மக்கள் மற்றும் இந்த நாட்டின் வாழும் அனைத்து மக்களுக்கும் பொதுவானது.

"பல பார்வையாளர்களின் வருகை எதிர்காலத்தில் சிறந்த படைப்புகளை உருவாக்க அவர்களை ஊக்குவிக்கும்" என்று அஸ்லி யூசோஃப் கூறினார்.

நேற்று ஷா ஆலம் சிட்டி கவுன்சில் கன்வென்ஷன் சென்டரில் (MBSA) நடைபெற்ற 2022 சிலாங்கூர் சர்வதேசப் புத்தகக் கண்காட்சியின் நிறைவு விழாவை தொடங்கி வைத்துப் பேசும் போது அவர் இவ்வாறு கூறினார்.

அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்களின் வருகை விரைவான தகவல் தொழில்நுட்பத்தின் சவால்களுக்கு மத்தியிலும் புத்தகங்கள் இன்னும் பொருத்தமானதாக இருப்பதை நிரூபித்ததாக அஸ்லி கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.