ஷா ஆலம்,நவ 28- நாட்டில் நேற்று 2,022 புதிய கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகியுள்ள ன. இதனுடன் சேர்த்து இந்நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 49 லட்சத்து 86 ஆயிரத்து 294 ஆக உயர்ந்துள்ளது.கோவிட்-19 நோயின் தாக்கம் அதிகம் உள்ள நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 27,207 ஆகும் என்று சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.
இதில் 361 நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வேளையில் 11 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளனர்.
சிலாங்கூர், சபா, திரெங்கானு மற்றும் பேராக் ஆகிய மாநிலங்களில் தலா ஒன்று என மொத்தம் நான்கு இறப்புகள் பதிவாகியுள்ளதை அமைச்சின் தரவு காட்டுகிறது.
மாநிலம் மற்றும் பிராந்திய வாரியாக கோவிட்-19 விவரம் வருமாறு:
சிலாங்கூர் (768)
கோலாலம்பூர் (159)
சபா (154)
கெடா (148)
பினாங்கு (134)
மலாக்கா (128)
சரவாக் (87)
கிளந்தான் (81)
பேராக் (75)
பகாங் (65)
நெகிரி செம்பிலான் (59)
திரெங்கானு (55 ) )
புத்ராஜெயா (54)
ஜோகூர் (37)
லாபுவான் (10)
பெர்லிஸ் (8)
ECONOMY
நாட்டில் நேற்று 2,022 பேருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று- நால்வர் பலி
28 நவம்பர் 2022, 11:18 AM
தொடர்புடைய செய்திகள்
national
ரிங்கிட் வலுவடைந்தது நாட்டின் பொருளாதார மீதான நம்பிக்கையின் அறிகுறி
Shalini Rajamogun
13 பிப்ரவரி 2026

video
PM: Pelaburan Kerajaan Madani mesti beri pulangan kepada rakyat
Kathiravan Manoharan
24 டிசம்பர் 2025

selangor
பராமரிப்பு துறை பங்களிப்பும் பொருளாதார யுக்தியாக அங்கீகரிக்கப்பட வேண்டும்
Evelyn Moses
10 அக்டோபர் 2025

selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

உங்கள் கருத்து என்ன?




