ECONOMY

வாகனங்கள் மீது மரம் விழுந்ததில் 6 பேர் காயமடைந்தனர்

7 நவம்பர் 2022, 4:51 AM
வாகனங்கள் மீது மரம் விழுந்ததில் 6 பேர் காயமடைந்தனர்

கோலாலம்பூர், நவ 7 - இன்று பெய்த கனமழையின் போது இங்குள்ள தாமான் மலூரியில் உள்ள ஜாலான் மாகோத்தாவில் மரம் ஒன்று வாகனங்கள் மீது விழுந்ததில் 6 பேர் லேசான காயமடைந்தனர்.

பலத்த காற்றினால் மரம் வேரோடு சாய்ந்தபோது, இப்பகுதியை கடந்து சென்ற மூன்று கார்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டதாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு கமாண்டர் மசூரி மாட் ஜைன் தெரிவித்தார்.

மாலை 4.07 மணிக்கு சம்பவம் குறித்து எச்சரிக்கப்பட்டதும், திணைக்களம் ஹாங் துவா மற்றும் பண்டார் துன் ரசாக் தீயணைப்பு நிலையங்களில் இருந்து 18 தீயணைப்பு வீரர்களையும் அவசர சேவை உதவி பிரிவையும் சம்பவ இடத்திற்கு அனுப்பியது.

"இரண்டு மற்றும் 70 வயதுக்குட்பட்ட இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் அடங்கிய ஆறு பேர் பாதிக்கப்பட்டவர்கள் லேசான காயங்களுக்கு ஆளாகியுள்ளனர் மற்றும் சிகிச்சைக்காக அம்பாங் மருத்துவமனைக்கு அனுப்பப் பட்டனர்.

“தடைபட்ட பாதையை  திறக்கும் பணிக்காக விழுந்த மரத்தை வெட்டி அகற்றுவதில். குடிமைத் தற்காப்புப் படையும், கோலாலம்பூர் மாநகர்  மன்றமும்   ஈடுபட்டுள்ளதாக  அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.