ECONOMY

தாய். மன்னர் கிண்ண கால்பந்து- பினால்டி வழி மலேசியா வெற்றி

23 செப்டெம்பர் 2022, 3:59 AM
தாய். மன்னர் கிண்ண கால்பந்து- பினால்டி வழி மலேசியா வெற்றி

கோலாலம்பூர், செப் 23- தாய்லாந்து மன்னர் கிண்ண கால்பந்துப் போட்டியின் மலேசிய குழு உபசரணை நாடான தாய்லாந்தை 5-3 என்ற கோல் கணக்கில் பினால்டி வழி வெற்றி கொண்டது.

இந்த போட்டியின் 90 நிமிட முழு நேர ஆட்டத்தில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்த காரணத்தால் வெற்றியைத் தீர்மானிக்க நடுவர் பெனால்டி வாய்ப்பினை வழங்கினார்.

முழு நேர ஆட்டத்தின் போது முதல் பாதியில் மலேசிய ஆட்டக்காரர் லா வேரி கார்பின் ஓங் முதல் கோலைப் போட்டார். தாய்லாந்து குழுவின் கோலை பன்சா ஹெம்பிவூன் செலுத்தி ஆட்டத்தை சமநிலைப் படுத்தினார்.

இந்த வெற்றியின் வழி மலேசிய அணி இந்த போட்டியில் இறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதியாட்டத்தில் மலேசியா தஜிகிஸ்தான் குழுவை எதிர் கொள்கிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.