ECONOMY

டாமன்சாரா ஜெயாவில் போலி சுடும் ஆயுதங்கள் வைத்திருந்த இருவர் கைது

19 செப்டெம்பர் 2022, 3:38 AM
டாமன்சாரா ஜெயாவில் போலி சுடும் ஆயுதங்கள் வைத்திருந்த இருவர் கைது

கோலாலம்பூர், செப் 19 - இங்குள்ள டாமன்சாரா ஜெயாவில் உள்ள வணிக வளாகத்தில் போலி துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகளை வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் காஸ்ப்ளே செயல் தந்திர உடை அணிந்த இரண்டு இளைஞர்கள் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து 15  மற்றும் 24 வயதுடைய இரு உள்ளூர் சந்தேக நபர்களும் மாலை 4.30 மணியளவில் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஒரு எம்4 கார்பைன், ஒரு க்ளோக் கைத்துப்பாக்கி மற்றும் இரண்டு கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் சூப்ரிண்ட். கு மஷாரிமான் கு மாமுட் கூறினார்.

கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் யாவும் போலியானவை எனக் கூறிய அவர், கைது செய்யப்பட்ட இருவருக்கும் கடந்தகால குற்றவியல் பதிவுகள் இல்லை என்றார்.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 117 ஆம் பிரிவின் கீழ் அவர்கள் செவ்வாய்க்கிழமை வரை மூன்று நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று  நேற்று இரவு வெளியிட்ட ஒரு அறிக்கையில் அவர் தெரிவித்தார்.

போலி ஆயுதங்களை வாங்கவோ அல்லது வைத்திருக்கவோ வேண்டாம் என்று பொதுமக்களுக்கு கு மஷாரிமன் அறிவுறுத்தினார்.  இச்செயல் சட்டவிரோதமானது என்பதோடு 1960 ஆம் ஆண்டு ஆயுதச் சட்டத்தின்  கீழ் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

பெட்டாலிங் ஜெயா மாவட்டத்தில் நிகழும் சட்டவிரோதச் செயல்கள் தொடர்பான தகவல்களை பெட்டாலிங் ஜெயா காவல்துறையின் ஹாட்லைன் 03-7966 2222 என்ற எண்ணில் அல்லது அருகிலுள்ள ஏதேனும் காவல் நிலையத்தில் தெரிவிக்கும்படி பொது மக்களை கேட்டுக் கொண்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.