ஷா ஆலம், செப் 16-
மலேசிய தின விடுமுறையையொட்டி மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவதால் இன்று காலை கிள்ளான் பள்ளத்தாக்கிலிருந்து வெளியேறும் வழிகளில் போக்குவரத்து அதிகரிக்கத் தொடங்கியது.இன்று காலை 9.45 மணிக்கு கிழக்கு கரையை நோக்கிச் செல்லும் தடத்தில் கோம்பாக் டோல் சாவடிக்கு நுழைவதற்கு முன் போக்குவரத்து மெதுவாக நகர்வதாக மலேசிய நெடுஞ்சாலை ஆணையம் டிவிட்டர் பதிவில் கூறியது.
கோம்பாக்கில் இருந்து கெந்திங் செம்பா சுரங்கப்பாதை, கெந்திங் செம்பா ஓய்வு மையம் முதல் புக்கிட் திங்கி வரை மற்றும் காராக் டோல் சாவடிக்கு முன்பும் போக்குவரத்து அதிகரித்து காணப்பட்டது.
வடக்கே, காலை மணி 9.25 அளவில் சுங்கை பூலோ மருத்துவமனையிலிருந்து சுங்கை புவாயா, புக்கிட் பெருந்தோங் முதல் புக்கிட் தாகர் மற்றும் லெம்பா பெரிங்கின் முதல் தஞ்சோங் மாலிம் வரை காலை 9.25 மணிக்கு வாகனங்கள் மெதுவாக நகர்வதைக் காண முடிந்தது.
பெஹ்ராங் ஸ்டேஷன் (வடக்கு) சுங்கை, தாப்பா முதல் கோப்பெங், மெனோரா சுரங்கப்பாதை முதல் சுங்கை பேராக் ஓய்வுப் பகுதி மற்றும் கோல கங்சார் முதல் புக்கிட் கந்தாங் ஆகிய பகுதிகளில் நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ECONOMY
கிள்ளான் பள்ளத்தாக்கிலிருந்து வெளியேறும் சாலைகளில் போக்குவரத்து அதிகரிப்பு
16 செப்டெம்பர் 2022, 6:21 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்டாலும் அவசரப்பட்டு முதலீட்டு முடிவுகளை எடுக்க வேண்டாம் - பொருளாதார நிபுணர் அறிவுறுத்தல்
Shalini Rajamogun, Suhaila Shahrul Annuar
18 ஜூன் 2026

national
மலேசியாவின் பணவீக்கம் 1.5 முதல் 2.5 விழுக்காட்டிற்குள் கட்டுப்படுத்தப்படும்; பொருளாதார அமைச்சு நம்பிக்கை
Shalini Rajamogun
15 ஜூன் 2026

selangor
பொருளாதார நெருக்கடியால் செலவினங்களைக் குறைக்க பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி நடவடிக்கை
Shalini Rajamogun, Adam Azman
13 ஜூன் 2026

selangor
பராமரிப்புப் பொருளாதாரத்தை மேம்படுத்த தென் கொரிய நிறுவனங்களுடன் இணைந்து சிலாங்கூர் அரசு முயற்சி – அன்ஃபால் சாரி
Shalini Rajamogun
12 ஜூன் 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?



