ECONOMY

சுங்கை கெடோன்டாங் பொழுதுபோக்கு பகுதியில் 2வது உலகப் போரின் வெடிகுண்டு கண்டு பிடிக்கப்பட்டன

11 செப்டெம்பர் 2022, 9:21 AM
சுங்கை கெடோன்டாங் பொழுதுபோக்கு பகுதியில் 2வது உலகப் போரின் வெடிகுண்டு கண்டு பிடிக்கப்பட்டன

கோலாலம்பூர், செப்டம்பர் 11: கடந்த புதன் கிழமை இங்கு அருகில் உள்ள சுங்கை கெடோன்டாங் பொழுதுபோக்கு பகுதியான ஜாலான் பாத்தாங் காலி - கெந்திங் மலையில் பழைய வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

உலு சிலாங்கூர் மாவட்ட காவல் துறைத் தலைவர் சுஃபியன் அப்துல்லா கூறுகையில், மதியம் 2 மணியளவில் அப்பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது உள்ளூர் நபர் ஒருவர் தனது நண்பருடன் 50 கிலோ எடையுள்ள பழைய வெடிகுண்டை கண்டுபிடித்தார்.

வியாபாரியான இவர், நேற்று மாலை 4.43 மணிக்கு புகார் அளித்ததாகவும், போலீசாரின் விசாரணையில், ஆற்றங்கரை பகுதியில் மண்ணில் புதையுண்டு, செயலிழந்த நிலையில் இருந்த பழைய வெடிகுண்டு என்பது தெரியவந்தது.

“இந்த பழைய வெடிகுண்டு ஜப்பானியப் போரின் போது விமானத்தில் இருந்து வீசப்பட்டது. குண்டின் சுற்றளவு 42 அங்குலம் (106.68 சென்டிமீட்டர்) மற்றும் நீளம் 42 அங்குலம்.

இன்று பிற்பகல் 2.50 மணியளவில் புக்கிட் அமான் வெடிகுண்டு பிரிவு மற்றும் சிலாங்கூர் கன்டிஜென்ட் போலீஸ் தலைமையகத்தின் குழு ஒன்று வெடிகுண்டை அழிக்க நடவடிக்கை எடுத்துள்ளது" என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் கவலைப்பட வேண்டாம் என்றும், ஏதேனும் தகவல் மற்றும் விவரங்களுக்கு உலு சிலாங்கூர் மாவட்ட காவல்துறை தலைமையகத்தை 03-60641223 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.