ECONOMY

சட்டவிரோதமாக குப்பை கொட்டிய லோரி பறிமுதல்- கோல லங்காட் நகராண்மை கழகம் நடவடிக்கை

16 ஆகஸ்ட் 2022, 9:29 AM
சட்டவிரோதமாக குப்பை கொட்டிய லோரி பறிமுதல்- கோல லங்காட் நகராண்மை கழகம் நடவடிக்கை

ஷா ஆலம், ஆக 16- கோல லங்காட், ஜாலான் சிஜங்காங் உத்தாமாவில் குப்பைகளை சட்டவிரோதமாக கொட்டிய லோரியை கோல லங்காட் நகராண்மை கழக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நேற்று காலை 11.30 மணியளவில் அமலாக்க அதிகாரிகள் அப்பகுதியில் ரோந்து நடவடிக்கை மேற்கொண்ட போது அந்த லோரி ஒட்டுநர் கையும் களவுமாக பிடிபட்டதாக கோல லங்காட் நகராண்மைக் கழகத் தலைவர் டத்தோ அமிருள் அஜிசான் அப்துல் ரஹிம் கூறினார்.

அப்பகுதியில் மண்ணைக் கொட்டி சீர்படுத்தும் பணியை தாங்கள் மேற்கொள்வதாக அந்த லோரி ஓட்டுநர் கூறிய போதிலும் அவர்கள் குப்பைகளை கொட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டது சோதனை வழி தெரிய வந்தது என்று அவர் சொன்னார்.

தனியாருக்கு சொந்தமான நிலத்தில் சீராக்கப் பணிகளை மேகொண்டிருந்த மண்வாரி இயந்திரம் ஒன்றும் இந்நடவடிக்கையின் போது பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

கோல லங்காட் நகராண்மைக் கழகத்தின் 2007 ஆம் ஆண்டு குப்பை சேகரிப்பு மற்றும் அழிப்பு துணைச் சட்டத்தின்  4வது பிரிவின் கீழ் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று அவர் சொன்னார்.

சட்டவிரோதமான முறையில் குப்பைகளைக் கொட்டுவோர் குறித்த தகவல்களை 012-300 4217 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு பொது மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.