ECONOMY

இளைஞர்களின் குரல் ஓங்க அக்டோபர் மாதத்தில் நடக்க உள்ள மாநில இளைஞர் காங்கிரசை பயன்படுத்துங்கள்

15 ஆகஸ்ட் 2022, 9:26 AM
இளைஞர்களின் குரல் ஓங்க அக்டோபர் மாதத்தில் நடக்க உள்ள மாநில இளைஞர் காங்கிரசை பயன்படுத்துங்கள்

பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 15: சிலாங்கூர் இளைஞர் காங்கிரஸின் (பிஇபிஎஸ்) நோக்கம்  தற்போதைய இளைஞர்கள்  பிரச்சினைகள் மற்றும் அவர்களின் ஆற்றலை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விவாதிக்கும் நோக்கத்துடன் வரும் அக்டோபரில் நடைபெறும்.

விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர்கள், மாநில சட்டமன்ற அளவில் உள்ள இளைஞர்களும் இதில்  கலந்து கொள்வதுடன், மாநில சட்டமன்ற உறுப்பினர்களுடன் தங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொள்ள  வாய்ப்பு உள்ளதாக கூறினார்.

"இந்த காங்கிரஸை ஏற்பாடு செய்வது குறித்து நாங்கள் விரிவான விவாதங்களை நடத்தி வருகிறோம், ஆனால் இது அக்டோபரில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய பிரச்சனைகள் மற்றும் மாநில மற்றும் நாட்டின் எதிர்கால சக்தியாக உள்ள இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் நடவடிக்கைகளில் முக்கிய கவனம் செலுத்தப் படுகிறது என்று இங்குள்ள சன்வே பிரமிடில் சிலாங்கூர் XTIV டேன் பின் பந்துவீச்சுப் போட்டியை நடத்திய பிறகு முகமது கைருடின் ஓத்மான் கூறினார்.

பிஇபிஎஸ் நிகழ்ச்சியைப் பற்றி கருத்து தெரிவித்த முகமது கைருடின், வரும் அக்டோபரில் சிலாங்கூர் சுக்கா முயூசிக் என்ற இசை நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

"இந்த நிகழ்ச்சி இசைக்கலைஞர்களும் ராக் பாடகர்களையும் ஒன்றாகக் கொண்டு வரும். சிலாங்கூர் மாநில விளையாட்டு கவுன்சில் (எம்எஸ்என்) ஏற்பாடு செய்திருக்கும் இந்த நிகழ்ச்சி கலைத் துறையை கௌரவப்படுத்துதல் நோக்கமாகக் கொண்டுள்ளது.

அதுமட்டுமின்றி மோட்டார் சைக்கிள், முய் தாய், பூப்பந்து போன்ற பல போட்டிகளையும் நடத்தவுள்ளோம் என்றார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.