ECONOMY

அனுமதியின்றி  செயல்பட்ட இரு பொழுது போக்கு மையங்கள் மீது எம்.பி.எஸ்.ஜே. நடவடிக்கை

12 ஆகஸ்ட் 2022, 8:15 AM
அனுமதியின்றி  செயல்பட்ட இரு பொழுது போக்கு மையங்கள் மீது எம்.பி.எஸ்.ஜே. நடவடிக்கை

ஷா ஆலம், ஆக 12- பூச்சோங் ஜெயா வட்டாரத்தில் உரிமம் இல்லாமல் இயங்கி வந்த இரண்டு பொழுதுபோக்கு மையங்களில் சுபாங் ஜெயா மாநகர் மன்றம் நேற்று சோதனை நடத்தியது.

செர்டாங் மாவட்ட போலீஸ் தலைமையகத்துடன் கூட்டாக மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கையில் அவ்வளாகங்களிலிருந்து பொழுதுபோக்கு உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக நகராண்மைக் கழகம் தனது முகநூல் பதிவில் தெரிவித்தது.

இச்சோதனையின் போது ஒரு பொழுதுபோக்கு மையம் உரிமம் இல்லாமல் பொழுதுபோக்கு நடவடிக்கைகளை மேற்கொண்டது தெரியவந்தது. மற்றொரு மையம் இச்சோதனையின் போது செயல்படவில்லை.

இத்தகைய மையங்கள் மீது காவல்துறை மூலம் அவ்வப்போது கண்காணிப்பு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்  நிர்ணயிக்கப்பட்ட  விதிகள் மற்றும் நிபந்தனைகளை மீறும் எந்தவொரு தரப்பினர் அல்லது தனிநபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகர் மன்றம் எச்சரித்தது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.