ECONOMY

ஆயர் சிலாங்கூர் - பாதிக்கப்பட்ட பகுதிகளில் 84 விழுக்காடு நீர் விநியோகம் மீட்ட அளிக்கப்பட்டது

12 ஆகஸ்ட் 2022, 3:23 AM
ஆயர் சிலாங்கூர் - பாதிக்கப்பட்ட பகுதிகளில் 84 விழுக்காடு நீர் விநியோகம் மீட்ட அளிக்கப்பட்டது

ஷா ஆலம், ஆகஸ்ட் 12 - இன்று காலை 6 மணி நிலவரப்படி பெட்டாலிங், கோலாலம்பூர் மற்றும் உலு லங்காட்டில் திட்டமிடப்படாத நீர் விநியோகத் தடை ஏற்பட்ட சுமார் 84 விழுக்காடு பகுதிகளில் நீர் விநியோகம் முழுமையாக மீட்டளிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீர் வழங்கல் நுகர்வோர் வளாகத்தின் இருப்பிடம் மற்றும் தூரத்தைப் பொறுத்து மாறுபடும் என்று சிலாங்கூர் நீர் மேலாண்மை எஸ்டிஎன் பிஎச்டி (ஆயர் சிலாங்கூர்) பேஸ்புக் பதிவில் தெரிவித்தது.

“மூன்று ஆயர் சிலாங்கூர் பிராந்தியங்களில் பாதிக்கப்பட்ட 397 பகுதிகளிலும் நீர் விநியோகம் இன்று இரவு 8 மணிக்கு முழுமையாக மீட்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"காலை 6 மணி நிலவரப்படி, பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீர் விநியோகம் 84 விழுக்காட்டை எட்டியுள்ளது" என்று அந்த பதிவு கூறுகிறது.

நேற்று, ஆயர் சிலாங்கூர் பகுதியில் உள்ள 397 பகுதிகள், அதாவது பெட்டாலிங் (3 பகுதிகள்), கோலாலம்பூர் (172 பகுதிகள்) மற்றும் உலு லங்காட் (222 பகுதிகள்) ஆகியவை லங்காட் 2 நீர் சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து திட்டமிடப்படாத நீர் தடையால் பாதிக்கப்பட்டன.

நீர் மீட்பு நிலை குறித்த சமீபத்திய தகவலுக்கு, ஆயர் சிலாங்கூர் செயலி, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் வழியாக ஆயர் சிலாங்கூர் தொடர்பு சேனல்களைப் பார்வையிடவும் அல்லது 15300 இல் ஆயர் சிலாங்கூரைத் தொடர்பு கொள்ளவும்.

www.airselangor.com என்ற இணையதளம் மற்றும் ஆயர் சிலாங்கூர் செயலியில் உள்ள உதவி மையத்தில் கேள்விகள் மற்றும் புகார்களை சமர்ப்பிக்கலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.