ECONOMY

ஏழு மாத பெண் குழந்தையின் வாயில் வேப் புகைக்க வைத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்

9 ஆகஸ்ட் 2022, 2:57 AM
ஏழு மாத பெண் குழந்தையின் வாயில் வேப் புகைக்க வைத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்

ஜோகூர் பாரு, ஆகஸ்ட் 9: சமீபத்தில் இங்குள்ள பண்டார் பாரு உடாவில் உள்ள ஒரு உணவகத்தில் நடந்த சம்பவத்தில் குழந்தையின் வாயில் வேப் வைத்ததாக நம்பப்படும் நபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

23 வயதான உள்ளூர் தொழிலதிபர் நேற்று மதியம் 12.45 மணியளவில் ஜேபியு மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக ஜோகூர் பாரு உத்தாரா (ஜேபியு) மாவட்ட காவல்துறைத் தலைவர் ரூபியா அப்துல் வாஹிட் தெரிவித்தார்.

ஆகஸ்ட் 6 ஆம் தேதி ஏழு மாத பெண் குழந்தையின் தாயார்  செய்த  காவல்துறை புகாரை தொடர்ந்து,  கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார், மேலும் சம்பந்தப்பட்ட நபர் தனது தங்கைக்கு அறிமுகமானவர் என்றும் அவர் விளக்கினார்.

புகார்தாரரின் கூற்றுப்படி, சம்பவத்தின் போது அவர் பாதிக்கப்பட்ட அவரது குழந்தை, தங்கை மற்றும் உணவகத்தில் சம்பந்தப்பட்ட நபருடன் இருந்தார்.

"திடீரென கேலி செய்யும் நோக்கத்தில் பாதிக்கப்பட்டவரின் வாயில் செயல்படாத வேப்பினை வைத்து, அந்த சம்பவத்தை அவரது சகோதரி பதிவு செய்து, பின்னர் அவரது சகோதரி சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து வைரலானார் என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.

அதைத் தொடர்ந்து, மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக சம்பந்தப்பட்ட நபருக்கான விளக்கமறியலில் நாளை விண்ணப்பம் செய்யப்படும் என்று அவர் கூறினார்.

குழந்தைகள் சட்டம் 2001 இன் பிரிவு 31 (1) (a) இன் படி இந்த வழக்கு விசாரிக்கப்பட்டதாக ரூபியா கூறினார், அதாவது குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது RM50,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

மேலும், உண்மைக்குப் புறம்பான கருத்துகளையோ அல்லது தகவல்களையோ வெளியிட வேண்டாம் என்றும், சமூக ஊடகங்கள் மூலம் சமூகத்திற்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் பொறுப்புடன் செயல்படவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

முன்னதாக, ஒரு நபர் தனது மடியில் இருக்கும் குழந்தையின் வாயில் வேப் வைப்பதைக் காட்டும் 17 வினாடி வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலாக பரவி பல்வேறு தரப்பினரின் விமர்சனங்களையும் எதிர்வினைகளையும் பெற்றது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.