ECONOMY

எட்டு மாதக் குழந்தை மரணம்- தாதி மற்றும் ஆடவருக்கு தடுப்புக் காவல்

28 ஜூலை 2022, 4:02 AM
எட்டு மாதக் குழந்தை மரணம்- தாதி மற்றும் ஆடவருக்கு தடுப்புக் காவல்

பங்கோர், ஜூலை 28- சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டதாக நம்பப்படும் எட்டு மாதக் குழந்தை மரணமடைந்தது தொடர்பான விசாரணைக்காக தாதி ஒருவரும் அவரின் ஆண் நண்பரும் எழு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

முப்பது வயது மதிக்கத்தக்க அவ்விருவரையும் விசாரணைக்காக குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் நேற்று முன்தினம் தொடங்கி ஒரு வார காலத்திற்கு தடுத்து வைப்பதற்கான நீதிமன்ற அனுமதியை தாங்கள் பெற்றுள்ளதாக பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ மியோர் ஃபாரிடாலாத்ராஷ் வாகிட் கூறினார்.

வெளிமாநிலத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்த அந்த ஆடவர் தற்போது தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

தாதியான அந்த பெண் ஆறு மாதங்களுக்கு முன்னர் தன் கணவரை விவாகரத்து செய்துள்ளது தொடக்க கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.

அந்த குழந்தையின் உடலில் புதிய மற்றும் பழைய காயங்கள் காணப்பட்டன. அக்காயங்கள் எவ்வாறு ஏற்பட்டன என்பதைக் கண்டறிவதற்காக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.