ECONOMY

எட்டு மாத குழந்தை மரணம்- தாதிக்கு ஒரு வார தடுப்புக் காவல்

26 ஜூலை 2022, 10:03 AM
எட்டு மாத குழந்தை மரணம்- தாதிக்கு ஒரு வார தடுப்புக் காவல்

ஷா ஆலம், ஜூலை 26- சுங்கை சிப்புட்டில் எட்டு மாத ஆண் குழந்தை மரணமடைந்த சம்பவம் தொடர்பில் தாதி ஒருவர் விசாரணைக்காக ஏழு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அக்குழந்தையின் தயாரான அந்த தாதி குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோ மியோர் ஃபாரிடாலாத்ராஷ் வாகிட் கூறினார்.

ஈப்போ, ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையில் நடத்தப்பட்ட சவப்பரிசோதனையில் அந்த குழந்தையின் உடலில் கடுமையான பொருளால் தாக்கப்பட்டதற்கான காயங்கள் தென்பட்டதைத் தொடர்ந்து அப்பெண் கைது செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.

ஆறு மாதங்களுக்கு முன்னர் விவகாரத்து ஆன அந்த பெண் அந்த குழந்தையை தனி ஒருவராக வளர்த்து வந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பதை கண்டறியும்  பொருட்டு 30 வயதுடைய அப்பெண் வரும் திங்கள்கிழமை வரை தடுத்து வைக்கப்படுவார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

உடலின் பல்வேறு இடங்களில் காயங்களுக்குள்ளான அந்த குழந்தை சுங்கை சிப்புட் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் உயிரிழந்தது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.