ECONOMY

புதிதாக 3,080 பேருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று – ஏழு மரணங்கள் பதிவு

19 ஜூலை 2022, 8:19 AM
புதிதாக 3,080 பேருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று – ஏழு மரணங்கள் பதிவு

ஷா ஆலம், ஜூலை 19- நாட்டில் நேற்று புதிதாக 3,080 பேருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று கண்டது. அதில் ஒன்று வெளிநாட்டிலிருந்து வந்தவரிடம் அடையாளம் காணப்பட்டது.

முந்தைய தினம் பதிவான தொற்றுகளுடன் ஒப்பிடுகையில் இது 856 குறைவாகும். நேற்று முன்தினம் 3,936 பேர் இந்நோய்க்கு இலக்காயினர்.

இதனிடையே, கோவிட்-19 தொடர்புடைய ஏழு மரணங்கள் நேற்று பதிவு செய்யப்பட்டன. அவற்றில் மூன்று மருத்துவமனைக்கு வெளியே நேர்ந்த மரணங்களாகும்.

நேற்று வரை நாட்டில் 42,185 தீவிர கோவிட்-19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன. அவர்களில் 40,622 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வேளையில் 34 பேர் பி.கே.ஆர்.சி. எனப்படும் சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்துதல் மையங்களிலும் 1,472 பேர் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து  நேற்று 3,399 பேர் குணமடைந்தனர். இதன் வழி இந்நோயிலிருந்து விடுபட்டவர்களின் எண்ணிக்கை 45 லட்சத்து 48 ஆயிரத்து 014 ஆக உயர்ந்துள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.