ECONOMY

விரைவாகப் பரவும் உருமாறிய ஒமிக்ரோன் திரிவு- நான்கே நாட்களில் கோவிட்-19 சம்பவங்கள் 31% அதிகரிப்பு

8 ஜூலை 2022, 10:00 AM
விரைவாகப் பரவும் உருமாறிய ஒமிக்ரோன் திரிவு- நான்கே நாட்களில் கோவிட்-19 சம்பவங்கள் 31% அதிகரிப்பு

ஷா ஆலம், ஜூலை 8- ஒமிக்ரோன் பிஏ5 வகை உருமாறிய திரிபு பரவல் கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து கோவிட்-19 நோய்த் தொற்றின் நான்காவது அலையை நாடு எதிர்கொள்ளும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 3 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரையிலான நான்கு நாட்களில் மட்டும் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை 31 விழுக்காடு அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

ஆகவே, பூஸ்டர் தடுப்பூசியை இன்னும் பெறாதவர்கள்  விரைந்து அதனைப் பெற்றுக் கொள்ளுமாறு அவர் கேட்டுக்  கொண்டார்.

நாட்டில்  நீண்ட நாட்களுக்குப் பின்னர் நேற்று கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை நான்காயிரத்தை தாண்டி 4,020 ஆகப் பதிவானது.

ஆகக் கடைசியாக கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி அதிகப்பட்சமாக 4,006 சம்பவங்கள் பதிவாகியிருந்தன.

நேற்று 3,561 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு ஆளாகியிருந்த வேளையில் நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 2,932 ஆக இருந்தது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.