ECONOMY

காதில் 'கிசுகிசுப்பு’ கேட்டதால், மகன் தாயை குத்திக் கொன்றானாம்!

6 ஜூலை 2022, 7:20 AM
காதில் 'கிசுகிசுப்பு’ கேட்டதால், மகன் தாயை குத்திக் கொன்றானாம்!

மலாக்கா, ஜூலை 6 - தஞ்சோங் கிளிங்கில் உள்ள கம்போங் பாயா லுபோவில் நேற்று நடந்த ஒரு சம்பவத்தில் வேலையில்லாத நபர் ஒருவர்  காதில் 'கிசுகிசுப்பு' கேட்டதாகக் கூறி தனது தாயைக் கத்தியால் குத்திக் கொன்றார்.

பிற்பகல் 3.05 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், பாதிக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஆசிரியை ரோசிசா முகமது டோம், 63, சந்தேக நபரால் அவரது கழுத்தின் இடது மற்றும் வலது பக்கங்களில் கத்தியால் குத்தியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மலாக்கா காவல்துறைத் தலைவர் டத்தோ ஜைனோல் சாமா தெரிவித்தார்.

முதற்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்டவரின் மூத்த மகனான சந்தேக நபர், சிலைகளை வழிபடுவதாக கூறப்படும் முதியவரை கத்தியால் குத்திக் கொல்லச் சொல்லும் ஒரு ‘கிசுகிசுப்பு’ கேட்டதாக சொல்லப்படுகிறது..

“குளித்து முடித்துவிட்டு வந்த அவரது தாயின் அறையில் இந்த சம்பவம் நடந்தது. சந்தேக நபர் கத்தியை ஜன்னல் வழியாக வெளியே எரிவதற்கு முன்பு தனது தாயிடம் கத்தியை ஒப்படைத்ததாகவும் கூறப்படுகிறது, ”என்று அவர் சம்பவ இடத்தில் சந்தித்தபோது கூறினார்.

சம்பவம் குறித்து போலிசில் அறிவிக்கப்படுவதற்கு முன்னர், பாதிக்கப்பட்டவரின் மகள்களில் ஒருவரின் அலறல் சத்தம் கேட்டு பாதிக்கப்பட்டவரின் அயலவர்களால் இந்த சம்பவத்தை கவனித்ததாக ஜைனோல் கூறினார்.

சந்தேக நபர் சில வருடங்களுக்கு முன்னர் மலாக்கா வைத்தியசாலையில் மனநல சிகிச்சை நாடியதாகவும், போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் தொடர்பாக இரண்டு பதிவுகள் இருப்பதாகவும் ஆனால் போதைப்பொருள் மறுவாழ்வு சிகிச்சைக்கு அவர் உட்படுத்தப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

சந்தேக நபருக்கு சிறுநீர் பரிசோதனை செய்யப்படும் என்று கூறிய அவர், கொலைக்கான தண்டனைச் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படும் என்றார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.