ECONOMY

தாய்-கைக்குழந்தை படுகொலை- கணவருக்கு ஏழு நாள் தடுப்புக் காவல்

5 ஜூலை 2022, 6:56 AM
தாய்-கைக்குழந்தை படுகொலை- கணவருக்கு ஏழு நாள் தடுப்புக் காவல்

ஜோகூர் பாரு, ஜூலை 5- இங்குள்ள கம்போங் பாக்கார் பத்துவிலுள்ள வீடொன்றில் தன் மனைவி மற்றும் மூன்று மாதக் கைக்குழந்தையை படுகொலை செய்ததாக நம்பப்படும் ஆடவரை விசாரணைக்காக எழு நாட்களுக்கு தடுத்து  வைப்பதற்கான நீதிமன்ற அனுமதியை போலீசார் பெற்றுள்ளனர்.

கப்பல் துப்புரவுப் பணியாளரான அந்த 24 வயது ஆடவருக்கு எதிரான தடுப்புக் காவல் அனுமதியை உதவி பதிவதிகாரி நோர் இஸாத்தி முகமது ஜஹாரி இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழங்கினார்.

குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் அவ்வாடவருக்கு எதிரான விசாரணையை மேற்கொள்வதற்கு ஏதுவாக இந்த தடுப்புக் காவல் அனுமதி வழங்கப்பட்டுள்து.

கம்போங் பாக்கார் பத்துவிலுள்ள தங்கள் வீட்டின் முன்புறம் மாதுவும் அவரின் குழந்தையும் இரத்த வெள்ளத்தில் கிடந்தது கண்டு பிடிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பின்னர் அந்த சந்தேகப் பேர்வழியை போலீசார் பெர்மாஸ் ஜெயாவில் கைது செய்தனர்.

அவ்வாடவர் நிர்வாணக் கோலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது போலீசார் அவரை மடக்கிப் பிடித்தனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.