ECONOMY

கோவிட்-19: கடந்த வாரம் புதிய சம்பவங்கள் மற்றும் இறப்புகள் அதிகரித்தன

4 ஜூலை 2022, 9:38 AM
கோவிட்-19: கடந்த வாரம் புதிய சம்பவங்கள் மற்றும் இறப்புகள் அதிகரித்தன

கோலாலம்பூர், ஜூலை 4: ஜூன் 26 முதல் ஜூலை 2 வரையிலான 26வது தொற்றுநோயியல் வாரத்தில் (ME) தினசரி புதிய கோவிட்-19 சம்பவங்கள் 6.1 விழுக்காடு அதிகரித்து 16,694 சம்பவங்களாக இருந்தது, முந்தைய வாரத்தில் 15,739 சம்பவங்களாக இருந்தது என்று தலைமை சுகாதார இயக்குநர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

இறப்புகளின் எண்ணிக்கை 13 இலிருந்து 26 ஆக 100% அதிகரித்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

குணப்படுத்தப்பட்ட சம்பவங்களின் எண்ணிக்கை 1.5 விழுக்காடு அதிகரித்து 14,078 சம்பவங்களாக உயர்ந்துள்ளது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

26 வது வாரத்தில் சராசரி தினசரி செயலில் உள்ளவை 28,956 சம்பவங்கள் ஆகும், இது 25 வது ME உடன் ஒப்பிடும்போது 3.4 விழுக்காடு அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் புதிய சம்பவங்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை இப்போது 4,571,355 ஆக உள்ளது.

முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் 100,000 மக்கள்தொகைக்கு 10 விழுக்காடு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU) படுக்கைகளின் பயன்பாடு 2 விழுக்காடு அதிகரித்த அதே சமயம், தீவிர சிகிச்சைப் பிரிவு அல்லாத நோயாளிகளுக்கான படுக்கையில் தங்கும் எண்ணிக்கை 4 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று நோர் ஹிஷாம் கூறினார். 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.