ECONOMY

காஜாங்கில் படகு கவிழ்ந்ததில் இரண்டு குடும்ப உறுப்பினர்கள் மூழ்கி பலியாகினர்

3 ஜூலை 2022, 10:14 AM
காஜாங்கில் படகு கவிழ்ந்ததில் இரண்டு குடும்ப உறுப்பினர்கள் மூழ்கி பலியாகினர்

கோலாலம்பூர், ஜூலை 3 - காஜாங்கின் தாமான் சாஹாயா சுங்கை சுவாவில் உள்ள நீர்த்தேக்கக் குளத்தில் இன்று படகு கவிழ்ந்ததில் இரண்டு குடும்ப உறுப்பினர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (ஜேபிபிஎம்) இயக்குநர் நோரஸாம் காமிஸ் கூறுகையில், பிற்பகல் 2.15 மணியளவில் இந்த சம்பவம் தொடர்பாக தங்களுக்கு ஒரு துயர அழைப்பு வந்தது.

“ஒரு ஆண் மற்றும் அவரது இரண்டு மகன்கள் அடங்கிய மூன்று நபர்கள் படகில் ஏறியதாக முதற்கட்ட தகவல் கிடைத்தது.

30 மீட்டர் ஆழத்தில் உள்ள நீர்த்தேக்கக் குளத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் மற்றும் 15 வயது இளைஞர் ஆகிய இருவரை நீர் மீட்புக் குழுவினர் ‘கிராப்பிங் அயர்ன்’ நுட்பத்தைப் பயன்படுத்தி கண்காணித்து வருகின்றனர்,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மற்றொரு 18 வயது இளைஞன் நீந்திப் பாதுகாப்பாகச் சென்றதாக நோரஸாம் கூறினார்.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.