ECONOMY

சந்தையில் விலை உச்சவரம்புக்கு மேல் இருந்தாலும் பெட்ரோல், டீசல் விலைகளில் மாற்றம் இல்லை

30 ஜூன் 2022, 10:03 AM
சந்தையில் விலை உச்சவரம்புக்கு மேல் இருந்தாலும் பெட்ரோல், டீசல் விலைகளில் மாற்றம் இல்லை
சந்தையில் விலை உச்சவரம்புக்கு மேல் இருந்தாலும் பெட்ரோல், டீசல் விலைகளில் மாற்றம் இல்லை

கோலாலம்பூர், ஜூன் 30: தானியங்கி விலை பொறிமுறை (ஏபிஎம்) சூத்திரத்தின்படி பெட்ரோலியப் பொருட்களின் வாராந்திர சில்லறை விலையின் அடிப்படையில் இன்று தொடங்கி ஜூலை 6 வரை ஒரு வாரத்திற்கு RON97, RON95 பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விலைகளில் மாற்றம் இல்லை.

நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், RON97 மற்றும் RON95 பெட்ரோல் சில்லறை விலை லிட்டருக்கு முறையே RM4.84 மற்றும் RM2.05 ஆகவும், டீசல் லிட்டருக்கு RM2.15 ஆகவும் உள்ளது.

"உலக சந்தையில் உண்மையான எண்ணெய் விலைகள் உயர்வதால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து நுகர்வோரைப் பாதுகாக்க, இரண்டு பொருட்களின் உண்மையான சந்தை விலைகள் நிர்ணயிக்கப்பட்ட உச்சவரம்பு விலை அளவை விட உயர்ந்திருந்தாலும், பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் சில்லறை விலையை அரசாங்கம் பராமரித்து வருகிறது," என அறிக்கை கூறியது.

உலக கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களின் தாக்கத்தை அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து, மக்களின் நலன் மற்றும் நல்வாழ்வு தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.