ECONOMY

வெளிநாட்டு விசா முறையில் 'சந்தேகத்திற்குரிய' ஒப்பந்தம் செய்தது தொடர்பாக நிறுவனத்தை விசாரிக்க அன்வார் வலியுறுத்து

24 ஜூன் 2022, 9:36 AM
வெளிநாட்டு விசா முறையில் 'சந்தேகத்திற்குரிய' ஒப்பந்தம் செய்தது தொடர்பாக நிறுவனத்தை விசாரிக்க அன்வார் வலியுறுத்து

ஷா ஆலம், ஜூன் 24: சந்தேகத்திற்கிடமான முறையில் அரசாங்க ஒப்பந்தங்களைப் பெற்றதாகக் கூறப்படும் அல்ட்ரா கிரானா எஸ்டிஎன் பிஎச்டி (யுகேஎஸ்பி) மீது மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்ஏசிசி) விசாரணை நடத்த டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் வலியுறுத்தியுள்ளார்.

அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட விஷயம் தொடர்பில் பிரதமர் மற்றும் மனித வள அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

"இந்த விவகாரம் தொடர்ந்து முறைகேடுகள் தொடர்பான பிரச்சினைகளை நிர்வகிப்பதில் அரசாங்கத்தின் மீது மக்கள் மத்தியில் நம்பிக்கையை குலைத்து வருகிறது மற்றும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது," என்று அவர் ஒரு ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.

யுகேஎஸ்பி என்பது வெளிநாட்டு விசா முறை தொடர்பாக முன்னாள் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி சம்பந்தப்பட்ட நீதிமன்ற விசாரணையில் குறிப்பிடப்பட்ட ஒரு நிறுவனம் ஆகும்.

இதற்கிடையில், ஜாஹிட் வழக்கு விசாரணையில் சாட்சிகளின் சாட்சியத்தில் பணம் பெற்றதாகக் கூறப்படும் பெயர்கள் குறித்த விசாரணையை எம்ஏசிசி திறக்கும் என்று பெரித்தா ஹரியான் தெரிவித்துள்ளது.

விசாரணையில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட லெட்ஜரில் பட்டியலிடப்பட்ட நபர்களுக்கு எதிரான புகார்கள் கிடைத்ததை ஆணையம் உறுதிப்படுத்தியது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.