ECONOMY

பெட்டாலிங்கில் 47 பகுதிகளில் நீர் விநியோகம் முழுமையாக மீட்டெடுக்கப்பட்டது – ஆயர் சிலாங்கூர்

22 ஜூன் 2022, 4:37 AM
பெட்டாலிங்கில் 47 பகுதிகளில் நீர் விநியோகம் முழுமையாக மீட்டெடுக்கப்பட்டது – ஆயர் சிலாங்கூர்

ஷா ஆலம், ஜூன் 22 - பெட்டாலிங்கில் திட்டமிடப்பட்ட தண்ணீர் தடையை அனுபவிக்கும் 47 பகுதிகளுக்கான நீர் விநியோகம் இன்று காலை 7 மணிக்கு முழுமையாக மீட்ட அளிக்கப்பட்டது.

சிலாங்கூர் நீர் மேலாண்மை எஸ்டிஎன் பிஎச்டி (ஆயர் சிலாங்கூர்) ஒரு அறிக்கையில், தண்ணீர் தடை காலத்தில் பொறுமை மற்றும் ஒத்துழைப்புக்கு நுகர்வோருக்கு நன்றி தெரிவித்தது.

நேற்று காலை 9 மணிக்கு தொடங்கிய புக்கிட் டிங்கில் நீர்த்தேக்கத்தின் நீர் வழங்கல் அமைப்பினை மேம்படுத்தும் பணிகள் காரணமாக பெட்டாலிங்கில் பல பகுதிகள் திட்டமிடப்பட்ட நீர் விநியோகத் தடையால் பாதிக்கப்பட்டன.

திட்டமிடப்பட்ட நீர் வழங்கல் இடையூறு பற்றிய அதிகாரப்பூர்வ தகவலுக்கு, ஆயர் சிலாங்கூர் செயலி, பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற ஆயர் சிலாங்கூர் தொடர்பு சேனல்களைப் பார்வையிடவும் அல்லது ஆயர் சிலாங்கூர் தொடர்பு மையத்தை 15300 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

விசாரணைகள் மற்றும் புகார்களை www.airselangor.com மற்றும் ஆயர் சிலாங்கூர் செயலி மூலம் உதவி மையத்திடம் சமர்ப்பிக்கலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.