ECONOMY

கால் வலிக்கு சிகிச்சை பெற மாமன்னர் மருத்துவமனையில் அனுமதி

20 ஜூன் 2022, 9:13 AM
கால் வலிக்கு சிகிச்சை பெற மாமன்னர் மருத்துவமனையில் அனுமதி

கோலாலம்பூர், ஜூன் 20 - மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதின் அல்-முஸ்தபா பில்லா ஷா, காலில் வலி ஏற்பட்டதை அடுத்து இங்குள்ள மருத்துவமனையில் சிறப்பு மருத்துவரின் கண்காணிப்பில்  தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

எவ்வாறாயினும், இஸ்தானா நெகாராவின் அரசு விவகார கட்டுப்பாட்டாளர் டத்தோ அகமது ஃபாதில் ஷம்சுதீன், அவரது மாட்சிமையின் உடல்நிலை பொதுவாக நன்றாக இருப்பதாக கூறினார்.

எனவே, மாமன்னர் சம்பந்தப்பட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் பின்னர் அறிவிக்கப்படும் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளதாக அவர் கூறினார்.

“சிகிச்சையை முடித்துக் கொண்டு மாட்சிமை தங்கிய பேரரசர் இஸ்தானா நெகாராவுக்கு விரைவில் திரும்புவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மன்னர் விரைவில் குணமடையவும், தொடர்ந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கவும் பொதுமக்கள் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளதாக அகமது ஃபாதில் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.