ECONOMY

சுதந்திரமாக சிறு வியாபாரம் செய்யும், திட்டத்தை டிபிகேஎல் மதிப்பாய்வு செய்யும்

17 ஜூன் 2022, 2:43 PM
சுதந்திரமாக சிறு வியாபாரம் செய்யும், திட்டத்தை டிபிகேஎல் மதிப்பாய்வு செய்யும்

கோலாலம்பூர், ஜூன் 17 - மத்திய தலைநகரில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் காரணிகளில் ஒன்றாகக் கருதப்படும் சுதந்திர வர்த்தகப் பகுதி திட்டத்தின் கீழ் இலவச உரிமத்தை கோலாலம்பூர் மாநகர் மன்றம் (டிபிகேஎல்) மதிப்பாய்வு செய்யும்.

கோலாலம்பூர் மற்றும் கூட்டரசு பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ ஷாஹிடான்  காசிம், டிபிகேஎல் மாநகர் மன்றம் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் இடங்களில், குறிப்பாக சாலையோரங்களில் வர்த்தகர்களின் நிலையையும் வணிக நடவடிக்கைகளையும் மறுசீரமைக்கும் என்றார்.

"பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதற்கான பிரச்சாரத்தை செயல்படுத்துவதை தவிர போக்குவரத்து நெரிசல் பிரச்சினைகளைத் தீர்க்க கூட்டரசு பிரதேச துணை அமைச்சர் தலைமையில் கூட்டம் நடத்தப்படும்" என்று அவர் இன்று கோலாலம்பூர் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் திடீர் வெள்ளப்பெருக்கு இடங்களை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

போக்குவரத்து நெரிசலை சமாளிப்பதற்கான முயற்சிகளின் மற்ற அமைச்சகங்கள் மற்றும் கட்சிகளுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்படும் என்றார் ஷாஹிடான்.

நவம்பர் 15, 2020 அன்று சுதந்திரமாக வியாபாரம் செய்ய அறிமுகப்படுத்தப்பட்ட இலவச உரிமம் வழங்கும்  திட்டம், மூன்று கூட்டரசு பிரதேச பிரதேசங்களில் உள்ள பொதுமக்கள் இலவசமாக பொருத்தமான பகுதிகளில் ஸ்டால்களை அமைக்க அல்லது சிறு வணிகங்களைத் திறக்க உதவுவதாகும், இது இந்த மாதத்தின் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.