ECONOMY

கிள்ளான் பள்ளத்தாக்கு மோட்டார் சைக்கிள்-திருட்டு கும்பல்களை போலீசார் முடங்கினர்

17 ஜூன் 2022, 4:44 AM
கிள்ளான் பள்ளத்தாக்கு மோட்டார் சைக்கிள்-திருட்டு கும்பல்களை போலீசார் முடங்கினர்

சுங்கை பூலோ, ஜூன் 17 - மே 14 மற்றும் 31 ஆம் தேதிகளில் சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் பல இடங்களில் 13 உள்ளூர் ஆண்களைக் கைது செய்து, ‘ஆடம் இஎக்ஸ்5’  மற்றும் ‘ஹைகல் எல்சி’ ஆகிய இரு மோட்டார் சைக்கிள் திருட்டுக் கும்பல்கள் போலீசார் முடக்கியுள்ளனர்.

நான்கு இடைநிலைப் பள்ளி மாணவர்கள் உட்பட 15 முதல் 22 வயதுக்கு உட்பட்டவர்கள் கைது செய்யப்பட்டார்கள் என சுங்கை பூலோ மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்ரிடெண்டன் ஷஃபாடன் அபு பக்கர் தெரிவித்தார்.

ஹோண்டா இஎக்ஸ்5 மற்றும் யமாஹா எல்சி135 மோட்டார் சைக்கிள்களின் உதிரிபாகங்களுக்கான அதிக தேவை காரணமாக கும்பல் குறிவைத்ததாக அவர் கூறினார்.

இரண்டு கும்பலைச் சேர்ந்தவர்களும் மிகவும் திறமையானவர்கள் என்றும், எலன் கீ போன்ற சில கருவிகளைப் பயன்படுத்தி மோட்டார் சைக்கிளைத் திருட 10 முதல் 15 நிமிடங்கள் மட்டுமே அவர்களுக்கு தேவை என்றும் அவர் கூறினார்.

"இரண்டு கும்பல்களும் இந்த பிரபலமான மாடல்களை குறிவைத்து, தங்கள் சொந்த உபயோகத்திற்காக மோட்டார் சைக்கிள் பாகங்களை திருடுவார்கள்," என்று அவர் நேற்று சுங்கை பூலோ மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் நடந்த ஊடக மாநாட்டில் கூறினார்.

மொத்தம் 56,500 ரிங்கிட் மதிப்புள்ள 11 மோட்டார் சைக்கிள்கள், எட்டு மோட்டார் சைக்கிள் பிரேம்கள், ஐந்து இன்ஜின்கள் மற்றும் திருடப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் பிற உதிரிபாங்களையும் போலீசார் கைப்பற்றியதாக அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.